டைவர்ஸுக்கு அப்புறம் ஆளு சூப்பர்ஸ்பீடுல இருக்காரே… ஜெயம்ரவியின் அடுத்த லைன் அப் இதான்!..
ஜெயம்ரவியின் அடுத்தடுத்த படங்கள் குறித்த ஆச்சரிய அப்டேட்
JayamRavi: சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தன்னுடைய கைவசம் இருக்கும் படங்களை தொடர்ந்து தற்போது இரண்டு முக்கிய படங்களை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எடிட்டர் மோகனின் மகனாக தமிழ் சினிமாவிற்கு வந்தாலும் தன்னுடைய நடிப்பால் ஒரு இடத்தை பிடித்தவர் தான் ரவி. முதலில் அதிகமாக ரீமேக் படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி. பின்னர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதன் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
அந்த வகையில் அவர் நடிப்பில் சமீப காலங்களாகவே வித்தியாசமான கதைகளை நடித்து ஹிட் அடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையால் ஜெயம் ரவி திரைப்படங்கள் சமீப காலங்களாகவே வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.
தற்போது தன்னுடைய விவாகரத்தை பொதுவெளியில் ஜெயம் ரவி அறிவித்த கையோடு பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தி முடித்து இருந்தனர். இந்நிலையில் பிரதர் திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியிடப்பட இருக்கிறது. தொடர்ந்து அவருடைய ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதை தொடர்ந்து இயக்குனர் ஜெயம் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரவி கால்ஷீட் ஒதுக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் சார்பில் இரண்டு படங்களில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதில் ஒரு படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க இருப்பதாகவும், மற்றொரு படத்தை புதுமுக இயக்குனர் அருள் சக்தி முருகன் இயக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.