Pushba2: புஷ்பா 2 படத்தின் 2ம் நாள் வசூல்.... மிரட்டிட்டாங்களே... போறபோக்கப் பார்த்தா 1000 கோடி தான்..!
புஷ்பா 2 படத்தோட ரெண்டாவது நாள் கலெக்ஷன் விவரம்;
புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 5ம் தேதி அதன் இரண்டாம் பாகம் வெளியானது. சுகுமார் இயக்கியுள்ளார். வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்துள்ளது.
இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத்பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். பாட்டு, பைட் சூப்பர்னு சொல்வாங்க. ஆனா இதுல சூப்பரோ சூப்பர்னும் சொல்லலாம். தேவிஸ்ரீபிரசாத், சாம் சிஎஸ் ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.
சாதாரணமா இரண்டரை மணி நேரம் படத்தையே ரசிகர்களால பொறுமையா உட்கார்ந்து பார்க்க முடியல. இந்தப் படமோ கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடுது. அப்படி இருந்தும் ரசிகர்களைக் கொஞ்சம் கூட சோர்வடைய விடாதவகையில் படுமாஸாக எடுத்துள்ளனர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் கோரியோகிராபர் அற்புதமான டான்ஸ் அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு அம்மன் பாடல் வருகிறது.
அதில் அம்மன் கெட்டப்பில் சேலையைக் கட்டியபடி அல்லு அர்ஜூன் ஆக்ரோஷமாக நடனம் ஆடுகிறார். இதைப் பார்த்த பெண் ரசிகை ஒருவர் தியேட்டரிலேயே அருள் வந்து சாமி ஆடி விட்டாராம். இந்த வீடியோ இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
முதல் நாளில் வசூல் 174.9 கோடியைத் தொட்டது. 2ம் நாளில் இந்திய அளவில் 90.10கோடியை வசூலித்துள்ளது. ஆக இதுவரை மொத்தமாக சேர்த்து வசூல் சேர்த்து உலகளவில் 400 கோடியை கடந்துள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் இதன் வசூல் மேலும் அதிகரித்து இன்னும் சில தினங்களில் 1000 கோடியைத் தொடுவதற்கு வாய்ப்புள்ளது.
படத்தின் முதல்நாள் அன்று ஐதராபாத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க அல்லு அர்ஜூன் வந்துள்ளார். அப்போது வந்த ஒரு தாயும், மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி சின்னா பின்னமானார்கள். இந்த நெரிசலில் தாய் உயிரிழந்தாள். அவரது 9 வயது மகன் மூச்சுத்திணறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு அல்லு அர்ஜூன் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
அந்தப் பதற்றம் அடங்குவதற்குள் மும்பை பாந்த்ராவில் படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது மர்ம நபர் ஒருவர் தியேட்டரில் ஸ்பிரே அடித்துள்ளார். அது பலருக்கும் வாந்தி, கண் எரிச்சலை ஏற்படுத்தி திரையரங்கை விட்டு வெளியே வந்துள்ளார்களாம்.