ரஜினிகாந்த் ரொம்ப பிஸி... ஜெயிலர்2க்கு பின்னர் இந்த இயக்குனருடன் இணைகிறாரா?

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து சினிமாக்களில் நடித்துவரும் நிலையில் அவருடைய அடுத்த பட இயக்குனர் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வருடத்திற்கு ஒரு படம் நடிப்பது தான் வழக்கம். ஆனால் கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பக்கா கமர்சியல் ஹிட் ஆக மாறியது.

இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ரொம்பவே சுறுசுறுப்பாக மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார். இதனால் இந்த ஒரு வருடத்தில் மட்டுமே ஒரு படத்தை முடித்து இன்னொரு படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ள தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லோகேஷின் மற்ற கதைகளை போல இல்லாமல் இப்படம் வித்தியாசமான தங்க கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா ராவ் ஆகியோர் இருக்கின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் இருந்த போலீஸ் வேடத்தின் முழு நீள கதையாக இது இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கிறார். விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் மலையாள இயக்குனருடன் இணைய இருக்கிறார். ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் தான் அடுத்து ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். நடிகர் மற்றும் இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் கடந்தாண்டு மலையாளத்தில் ஹிட் படைப்பாக உருவான 2018 இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் ஜூட் ஆண்டனி ஜோசப் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்களும் இணையத்தில் வெளியானது. ஆனால் குறித்த தகவல்கள் இன்னும் எதுவும் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.

Related Articles
Next Story
Share it