ஷங்கரை டென்ஷனாக்கிய சூர்யா படம்... எந்திரன் படக்கதை வழக்கு மறந்து போச்சா?

தலைப்பைப் பார்த்ததும் ஷங்கர் எப்படா டென்ஷன் ஆனாருன்னு தோணும். அவர் பற்றிய செய்திகள் இந்தியன் 2க்குப் பிறகு இப்போது தான் வந்துள்ளது. வலைப்பேச்சு டீம் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போமா...

பொத்தாம்பொதுவா ஒரு கருத்தை சொல்லும் போது யாருன்னு தெரியாம இவங்களா இருக்குமோ, அவங்களா இருக்குமோன்னு ஒரு கூட்டம் பயங்கரமா சண்டையைப் போட்டுக்கிட்டு இருக்கு. அது மாதிரி ஒரு சூழ்நிலையை நேற்று ஷங்கரும் கிரியேட் பண்ணிட்டாரு. அவரு என்ன சொன்னாருன்னா வேள்பாரி கதையோட ரைட்ஸ் எங்கிட்ட இருக்கு. ஆனா அந்தக் கதையில வர்ற முக்கியமான விஷயங்களை எல்லாம் எடுத்து படங்கள்ல பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க.

இதைப் பார்க்கும்போது ரொம்ப கலக்கமடைகிறேன்னு ட்வீட் பண்ணியிருக்காரு. இது யாருன்னு தெரியாம நிறைய பேரு எனக்குப் போன் பண்ணிக் கேட்டுக்கிட்டு இருக்காங்கன்னு வலைப்பேச்சு அந்தனன் சொல்றாரு. அதுக்கு பிஸ்மி, தேவரான்னு ஒரு படத்தோட டிரெய்லர் சமீபத்தில் வந்தது. அதைச் சொல்றாருன்னு ஒரு சிலர் சொல்றாங்க. இன்னும் சிலர் இது சூர்யாவோட கங்குவா படம்னு சொல்றாங்க என்றார்.


உடனே சக்திவேல், அவர் சமீபத்தில் வந்த படத்தோட டிரைலர்னு சொல்றாருன்னு சொல்ல, அந்தனன் குறுக்கிட்டு அவர் சமீபத்தில்னு சொல்றதே கங்குவாவத் தான் இருக்கும். அவரே படத்தை முடிச்சிட்டு சமீபத்தில் தான் சென்னைக்கே வந்தார் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார். அப்புறம் காந்தாரா 2வையும் சேர்த்துக்கோங்கன்னு சக்திவேல் தன் பங்கிற்கு சொல்கிறார்.

அப்புறம் ஒருவழியாக பிஸ்மி அவர் கதைக்கு நான் ரைட்ஸ் வாங்கிருக்கேன். இந்தக் கதையை யாரும் பயன்படுத்தக்கூடாதுன்னு லீகலா அறிவிப்பு கொடுக்கணும்னு சொல்றாரு. அப்படி கொடுத்துருந்தா பிரச்சனையே இல்லைன்னு அந்தனன் சொல்றாரு.

அப்புறம் பொதுவா ஷங்கர் மாதிரி மூத்த இயக்குனர் குறிப்பிட்டு இவர்தான்னு சொல்லணும் என்கிறார். அப்புறம் பிஸ்மி எந்திரன் படக்கதைக் குறித்து இவர் மீதே வழக்கு போய்க்கிட்டு இருக்கு. நீங்களே அப்போ கைவச்சீங்க. இப்போ உங்க கதை மேல கைவைக்கும்போது இவ்வளவு கொதிக்கிறீங்களேன்னு விமர்சனம் போகுது என்கிறார். உடனே அந்தனன் அந்த வழக்கு எல்லாம் தள்ளுபடி ஆகிடுச்சுன்னு சொல்லி அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

Related Articles
Next Story
Share it