அஜித் படம் வாங்கி அடிவாங்கிய கலாநிதி மாறன்!.. குட் பேட் அக்லி நிலைமை இப்படி ஆகிப்போச்சே!..

By :  MURUGAN
Published On 2025-05-29 19:45 IST   |   Updated On 2025-05-29 19:45:00 IST

Good Bad Ugly: ஓடிடி என்பது சினிமா வியாபாரத்தில் ஒரு முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் பிரபலமானது. சூர்யாவின் ஜெய்பீம், சூரரைப்போற்று மற்றும் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் ஓடிடியில் நேரிடையாக வெளியானது.

தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் புதிய படங்கள் ரிலீஸாகி 3 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகி வந்தது. இதற்கு ஓடிடி நிறுவனங்கள் பெரும் தொகையை கொடுத்தன. ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களை 100 கோடியெல்லாம் கொடுத்து வாங்கினார்கள். எனவே, தயாரிப்பாளர்களுக்கு இது பெரிய லாபத்தை கொடுத்தது.

ஓடிடி நிறுவனங்கள் கொடுக்கும் தொகையில் நடிகர்களுக்கு சம்பளம் கொடுத்துவிடலாம் என்கிற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு வந்தது. எனவே, நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்க அவர்கள் சம்மதித்தனர். ஆனால், ஓடிடியில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறிந்து அந்த நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்ததால் புதிய படங்களுக்கு கொடுக்கும் தொகையை குறைத்துவிட்டார்கள்.


இதனால், மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2, டிரெய்ன் போன்ற பல புதிய படங்கள் இன்னும் தியேட்டரிலேயே வெளியாகாமல் உள்ளது. எனவே, ஒரு படம் வெளியாவதே ஓடிடி நிறுவனங்களின் கையில் இருப்பதுதான் கோலிவுட்டின் இன்றைய நிலை. அமேசான், நெட்பிளிக்ஸ் இல்லாமல் சன் டைரக்ட், ஹாட் ஸ்டார், ஜீ தமிழ் போன்ற நிறுவனங்களும் புதிய படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள்.

இதில் விடாமுயற்சி பட உரிமையை சன் டைரக்ட் நிறுவனம் வாங்கியது. ஆனால், ஓடிடியில் அந்த படத்தை பார்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இது சன் டைரக்ட் நிறுவனத்திக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஒருபக்கம், குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி உரிமையையும் சன் டைரக்ட் நிறுவனமே வாங்குவதாக இருந்தது.

விடாமுயற்சியின் நிலைமையை பார்த்துவிட்டு ‘குட் பேட் அக்லி’ படம் எங்களுக்கு வேண்டாம் என சன் டைரக்ட் நிறுவனம் சொல்லிவிட்டதாம். அதனால்தான் குட் பேட் அக்லி படத்தை ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News