சூப்பர்ஸ்டார் பட்டம் மட்டும் வேணும்.. விஜய்க்கு இருக்க மனசு கூட உங்களுக்கு இல்லையே ரஜினி? வெளுக்கும் பிரபலம்

ரஜினிகாந்த் பட்டத்தை மட்டுமே விரும்புகிறார். ஆனால் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் என்ற கேள்வி பல வருடமாக இருக்கிறது.

By :  Akhilan
Update: 2024-09-24 15:30 GMT

SuperStar: நடிகர் ரஜினிகாந்த் வாய் பேச்சு மட்டுமே பேசுவார். ஆனால் அதை செயலில் என்றுமே காட்ட மாட்டார் என பிரபல திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்திருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீப காலமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பலவிதங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதில் அவருடைய சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை பல மாதங்களாக நீடித்தது. தற்போது மீண்டும் ரஜினி மீதான ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் பொறுப்பேற்றதிலிருந்து பிரம்மாண்டமாக நடிகர் சங்க கட்டடத்தை கட்ட முடிவெடுத்தனர். இருந்தும் நடிகர் சங்கத்தில் இருக்கும் கடனை காரணமாக கட்டிடம் கட்டும் பணி தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

இதனால் கூட்டத்தில் பேசப்பட்டு, உச்ச நடிகர்களிடமிருந்து ஒரு தொகையை வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்தனர். அதன்படி பிரபல நடிகர் விஜய், கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடிகர் சங்க நிதியாக ஒரு கோடி ரூபாயை வழங்கியிருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சமும் இன்னும் முக்கிய நடிகர்கள் நிதி கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் இதில் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை எந்தவித நிதியும் கொடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரபல திரை விமர்சகர் அந்தணன் கூறும்போது, ரஜினிகாந்தை தமிழ் சினிமா நடிகர்களை பிரம்மாண்டமாக தான் பார்க்கின்றனர். அவருடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்வது தங்களுடைய பெரிய வரமாக நினைக்கின்றனர்.

அப்படி இருக்கும்போது உங்களுடைய நடிகர் சங்கத்திற்கு 5 கோடியை கூட நீங்கள் தூக்கிக் கொடுத்தால் உங்களுடைய மதிப்பு அப்பொழுதுதானே அதிகமாக பேசப்படும். வாழ்க்கை கொடுத்த தமிழ்நாடு என பேசும் ரஜினிகாந்த் இப்படி செய்யலாமா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Tags:    

Similar News