பெரிய படங்களில் நடித்த மூன்றெழுத்து நடிகை.. போதைப் பொருள் வழக்கில் அடுத்த டார்கெட்

by ROHINI |   ( Updated:2025-06-29 09:36:18  )
srikanth
X

srikanth

ஒட்டுமொத்த தமிழ் திரை உலகமும் இப்போது ஆடிப் போயிருக்கிறது. அதற்கு என்ன காரணம் எனில் அண்மையில் கொக்கைன் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இவர்கள் இரண்டு பேரை தொடர்ந்து யார் மீதெல்லாம் இந்த கைது நடவடிக்கை தொடரும் என சோசியல் மீடியாக்களில் பல பேர் பல கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் சுட்டிக்காட்டுவது எல்லாமே ஆதாரப்பூர்வமாக இல்லை என்பதுதான் முக்கியமான செய்தி.

காவல்துறைக்கும் அவர்களுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா அல்லது காவல்துறை சொல்லி அவர்கள் பேசுகிறார்களா என்பது கிடையாது .ஏனெனில் சோசியல் மீடியாக்களில் முக்கியமாக யூடியூபில் உட்கார்ந்து பேசுகிற பல பேருக்கு ஏதாவது ஒன்றை சொல்லி ஆக வேண்டும் என்ற ஒரு விதத்தில் தான் பேசி வருகிறார்கள். அப்படி இவர்கள் பேசுகிற பல விஷயங்கள் ரொம்ப பேரதிர்ச்சியை கொடுக்கிறது. நமக்கே இவ்வளவு பேரதிர்ச்சி என்றால் அவர்களை வைத்து படம் எடுப்பவர்களுக்கு எவ்வளவு ஒரு பேரதிர்ச்சியாக இருக்கும்.

இன்று அவர்கள் மீது ஒரு கரும்புகை விழுகிறது என்றால் அவர்களின் படம் திரைக்கு வெளிவரும் பொழுது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதாரம் இல்லாமல் பேசுகிற பல கூல் சுரேஷ் களை இங்கு நாம் பார்க்க முடிகிறது. ஏனெனில் நேற்று ஒரு காணொளி வெளியானது. அதாவது போதைப் பொருள் வழக்கில் அடுத்த குற்றவாளியாக இவர் சேர்க்கப்படுவார் என்று கூறுவதில் ஒரு மூன்றெழுத்து நடிகையின் பெயர் அடிபட்டு வருகிறது.

அந்த மூன்றெழுத்து பெயர் கொண்ட நடிகை சமீபத்தில் வந்த இரண்டு பெரிய படங்களில் கதாநாயகியாக நடித்தார் என்று சொல்லும் போதே அதில் யாரை சொல்கிறார்கள் என்று புரிந்துவிடும். அப்போ அவருக்கு யார் ரொம்ப நெருக்கமாக இருக்கிறாரோ அவர்கள் மீதும் ஒரு குற்றச்சாட்டை வைக்கலாம் என நினைத்து பல பேர் அதை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். போதைப்பொருள் வழக்கே இப்போது அவரை நோக்கித்தான் போகிறது என்பது மாதிரி கொண்டு வந்து விட்டார்கள்.

சமீபத்தில் திருச்சி சிவா பேசிய ஒரு வீடியோவில் மாலை ஆறு மணிக்கு பிறகு விஜயை நடிக்க சொல்லுங்கள். பார்ப்போம். 6:00 மணிக்கு மேல் அவரால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கவே முடியாது .என்ன காரணம் என பயங்கரமாக அடுக்கிக் கொண்டே போகிறார். இதில் அவர் சொல்ல வந்த காரணம் என்னவெனில் ஆறு மணிக்கு மேல் அவர் போய் சரக்கு அடிக்க வேண்டும். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரால் நிற்கவே முடியாது .

அப்படி மாதிரியான ஒரு கருத்தை உருவாக்க முன் வருகிறார் .இப்போது இந்த மூன்றெழுத்து நடிகையை பிடித்து விசாரித்தால் அவங்க யாருக்கு கொக்கைன் கொடுத்தார் என்றால் விஜய்க்கு தான் கொடுத்திருப்பார் என சொல்ல வருகிறார் திருச்சி சிவா. இப்படி சுற்றி வளைத்து விஜயிடம் கொண்டு வந்து முடிக்கிறார்கள். சுசித்ரா கூட சமீபத்திl chatgptயில் போய் பார்த்தால் கொக்கைன் பயன்படுத்துவதால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை விளக்கமாக போட்டிருக்கிறார்கள். முக்கியமாக தலைமுடி உதிரும். வழுக்கை விழும் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

anthanan

அப்போ எல்லாருடைய கையும் இப்போது விஜயை நோக்கி நீட்டப்படுகிறது .ஆனால் அவர் குடிப்பாரா இல்லையா என்பது ஒருபக்கம் இருந்தாலும் என்றைக்காவது குடித்துவிட்டு கார் ஓட்டினார், குடித்துவிட்டு ஸ்பாட்டுக்கு வந்தார் என்பது மாதிரி எந்த விஷயமும் நடந்தது இல்லை. சொல்லப்போனால் அவருக்கு சுகர் அதிகமாகி ஒரு கட்டத்துக்கு மேல் என்னென்ன சாப்பிடணும் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் ஆலோசனையின் படிதான் ஃபாலோ செய்து வருகிறார். இப்படி இருக்கும் போது விஜயை டார்கெட் செய்வது என்ன விதத்தில் நியாயம் என இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

Next Story