6 மணிக்கு மேல அண்ணன் வெளியே வரமாட்டார்!.. ஏன் தெரியுமா?!. விஜய் பற்றி பகீர் கிளப்பும் பிரபலம்!..

by MURUGAN |
vijay
X

vijay

Actor vijay: சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக இருக்கும்போதே அரசியலுக்கு போகிறேன் என சொல்லிவிட்டார் விஜய். அவரை சினிமாவில் ரசிக்கும் ரசிகர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை. அதேநேரம், அவரை முதலமைச்சராக பார்க்க ஆசைப்படும் அவரின் ரசிகர்கள் இதை வரவேற்கிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அவ்வப்போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் விஜய். ஆளும் திமுக அரசை விமர்சித்து அவ்வப்போது அறிக்கையும் வெளியிட்டும் வருகிறார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது.


ஜனநாயகன் படம் 2026 ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. விஜய் தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என்பது 2026 சட்டமன்ற தேர்தல் ரிசல்ட்டுக்கு பின்னரே தெரியவரும். அதுவரை ஜனநாயகனே அவரின் கடைசிப்படம் என்கிறார்கள். விஜய் அதிகம் பேசமாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட மிகவும் அமைதியாகவே இருப்பார்.

அதேபோல், 6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது என வடிவேலு சொல்வது போல விஜய் 6 மணிக்கு மேல் நடிக்க மாட்டார். 6 மணி ஆகிவிட்டால் வீட்டிற்கு கிளம்பிவிடுவார். இரவு நேரங்களில் அவர் யாரையும் சந்திக்கவும் மாட்டார். இதை பல வருடங்களாக அவர் பின்பற்றி வருகிறார்.


இந்நிலையில், பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா என்பவர் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜயை மாலை 6 மணிக்கு மேல் யாராவது பார்த்தது உண்டா?.. மாநாடு நடத்தியபோதும் கூட 6 மணிக்கு முடித்துவிட்டு போய்விட்டார். 6 மணிக்கு மேல் அவர் யாரையும் சந்திக்க மாட்டார். அதற்கு காரணம் அவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. ஷூட்டிங்கில் கூட 6 மணி ஆகிவிட்டால் கேரவனுக்கு போய்விடுவார்’ என சொல்லியிருக்கிறார். ஆனால், விஜயின் ரசிகர்களோ ‘விஜய்க்கு மது அருந்தும் பழக்கமெல்லாம் இல்லை. இவன் பொய் சொல்கிறான்’ என அவரை திட்டி வருகிறார்கள்.

ஜனநாயகன் படத்திற்கு பின் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடவிருக்கிறார். அப்போது கண்டிப்பாக 6 மணிக்கு மேல் அவர் மக்களை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே, இது போன்ற செய்திகளெல்லாம் அப்போது காணாமல் போய்விடும் என்கிறார்கள் விஜயின் ஆதரவாளர்கள்.


Next Story