டாக்டர்கிட்ட போங்க!.. ட்ரீட்மெண்ட் எடுங்க!... சுசித்ரா பேட்டிக்கு பொங்கிய வைரமுத்து....
சுசித்ராவின் புகாருக்கு பதில் சொல்லி இருக்கிறார் வைரமுத்து..
தமிழ் சினிமாவில் முக்கிய பாடலாசிரியராக வலம் வந்தவர் வைரமுத்து. 80களில் பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணியில் பல அற்புதமான பாடல்கள் உருவானது. ஒருகட்டத்தில் இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
அதன்பின் ஏ.ஆர்.ரஹ்மானும் கூட்டணி அமைத்து பல படங்களிலும் பாடல்களை எழுதினார் வைரமுத்து. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நிறைய கவிதைப் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார். மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தவர் இவர். 5 முறை தேசிய விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.
இவரின் தமிழிழுக்கும், கவிதைகளுக்கும், பாடல் வரிகளுக்கும் ரசிகர்கள் பலரும் உண்டு. அந்த நிலையில்தான், பாடகி சின்மயி இவர் மீது பாலியல் புகாரை சொன்னார். அவர் என்னை தவறான முறையில் அணுகினார் என சொல்ல அது பற்றிக்கொண்டது. ஆனால் அந்த புகாரை மறுத்தார் வைரமுத்து.
இப்போது ரஹ்மான் இசையிலும் வைரமுத்து பாடல்களை எழுதுவதில்லை. முழுக்க இலக்கியம் சார்ந்த பணிகளில் மட்டும் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில், திரையிலகில் பலர் மீதும் பல புகார்களை சொல்லி வரும் பாடகி சுசித்ரா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் வைரமுத்து பற்றி புகார் சொன்னார்.
பாடகிகளை குறி வைக்கும் வைரமுத்து அவர்களை சந்திக்கவேண்டும் என சொல்லி தனிமையில் அழைப்பார். என்னையும் ஒரு முறை அப்படி அழைத்தார். என் பாட்டியுடன் போனதால் எனக்கு ஷாம்பு பாட்டில் பரிசாக கொடுத்தார் என சொல்ல அது சமூகவலைத்தளங்களில் ட்ரோலுக்கு உள்ளானது.
இந்நிலையில், டிவிட்டர் பக்கத்தில் இந்த புகாருக்கு பதில் சொல்லும் விதமாக கவிதை ஒன்றை எழுதியுள்ளார் வைரமுத்து.
வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது
வக்கிர வார்த்தைகளை
உக்கிரமாய் வீசுவர்;
தொடர்பற்ற மொழிகள் பேசுவர்
பைத்தியம்போல் சிலநேரமும்
பைத்தியம்
தெளிந்தவர்போல் சிலநேரமும்
காட்சியளிப்பர்
தம்மைக் கடவுள் என்று
கருதிக்கொள்வர்
இந்த நோய்க்கு
‘Messianic Delusional Disorder’
என்று பெயர்
அவர்கள் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள் அல்லர்;
இரக்கத்திற்குரியவர்கள்;
அனுதாபத்தால்
குணப்படுத்தக் கூடியவர்கள்
உளவியல் சிகிச்சையும்
மருந்து மாத்திரைகளும் உண்டு
உரிய மருத்துவர்களை
அணுக வேண்டும்
என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.