டிரக்கிங் சென்ற பெண்ணை மிதித்து கொன்ற யானை : கோவை அருகே அதிர்ச்சி

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள மலைப்பகுதி பாலமலை. குஞ்சூர்பதி என்கிற கிராமம் வழியாக பலரும் மாங்குழி என்கிற பகுதி வழியாக இந்த மலைப்பகுதிக்கு பலரும் டிரக்கிங் (மலையேற்றம்) செல்வது வழக்கம்.

By :  adminram
Update: 2020-01-20 16:02 GMT

ஆனால், இதற்கு வனத்துறையின் அனுமதி அளிப்பதில்லை. ஆனாலும், வார இறுதி நாட்களில் சிலர் அனுமதியின்றி டிரக்கிங் செல்கின்றனர்.

இந்நிலையில், கேரளாவை சேர்ந்த புவனேஸ்வரி(40) என்பவர் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் நேற்று அங்கு சென்றுள்ளார். அதிகாலையில் அங்கு சென்ற அவர்கள் மலையேறியுள்ளனர். அப்போது திடீரென அவர்கள் முன் ஒரு ஆண் யானை வந்துள்ளது. இவர்களை கண்டதும் யானை விரட்டியுள்ளது. எல்லோரும் நாலா பக்கமும் சிதறி ஓடியுள்ளனர். ஆனால், யானை புவனேஸ்வரியை துரத்தியுள்ளது.

யானையிடமிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவரை காலால் மிதித்து கொன்றுவிட்டது. அவரது உடலைக்கண்டு அவரின் கணவர் கதறி அழுதார். வனத்துறையினர் அவரது உடலை மீட்டு கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரணமடைந்த புவனேஸ்வரி சங்கரா கண் மருத்துவமனையில் நிர்வாக பிரிவு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.