சைக்கோ படத்திற்கு தடையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ படத்திற்கு தடை கேட்டு சினிமா பைனான்சியர் ஒருவர் தொடர்ந்திருந்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.�
மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம் புலி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இத்திரைப்படம் வருகிற 24-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் தன்னிடம் பணம் வாங்கிவிட்டு ஒரு படத்தை இயக்கி கொடுப்பதாக கூறியிருந்தார். ஆனால், என் படத்தை இயக்காமல், உதயநிதியை வைத்து சைக்கோ படத்தை எடுத்துள்ளார். எனவே, சைக்கோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஒரு சினிமா பைனான்சியர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மாலை 3 மணியளவில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என மறுத்துவிட்டார். அதேநேரம், அந்த பைனான்சியருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மிஷ்கின் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.