அடுத்தவர் மனைவியுடன் தகாத உறவு : தலைப்பொங்கல் கொண்டாடிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்

வேலூரில் தலைப்பொங்கல் கொண்டாடிய புது மாப்பிள்ளை கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By :  adminram
Update: 2020-01-20 02:20 GMT

வேலூரில் தலைப்பொங்கல் கொண்டாடிய புது மாப்பிள்ளை கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுனர் மாரிமுத்து. இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இந்த வருடம் அவர் தலைப் பொங்கலை மனைவியுடன் கொண்டாடியுள்ளார். இதையடுத்து பொங்கலுக்கு மறுநாள் அவர் ஏரிக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது தலையில் இருந்த காயத்தை வைத்து யாரோ பாறாங்கல்லை அவர் மேல் போட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் அவரைக் கொலை செய்தது அதே தெருவில் வசிக்கும் ராணுவ வீரரான தீர்த்த செல்வன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தீர்த்த செல்வனின் மனைவிக்கும் மாரிமுத்துவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதை நிறுத்த சொல்லியும் கேட்காத மாரிமுத்துவை தீர்த்த செல்வன் தனது நண்பர்களுடன் சென்று கொலை செய்துள்ளார். இதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.