சிங்கப்பெண்ணே: ஆனந்தியின் கர்ப்பம் வார்டனுக்கு தெரிந்ததா? அம்மாவின் பேச்சைக் கேட்டு அதிர்ந்த அன்பு!
சன்டிவியில் சிங்கப்பெண்ணே தொடர் விறுவிறுப்பாகப் போகிறது. இந்த நிலையில் இன்று நடந்த கதைச்சுருக்கம் என்ன என்பதைப் பார்ப்போம்.
துளசி ஆனந்தியிடம் 'நீங்க எதை மனசுல வச்சிட்டு இந்த முடிவை எடுத்தீங்கன்னு தெரியல. அது எதுவாக இருந்தாலும் எல்லாத்தையும் மறந்துடுங்க. அத்தை கூடிய சீக்கிரத்துல வா மருமகளேன்னு சொல்லி கூப்பிடுவாங்க. அது மட்டும் நிச்சயம். உங்க மனசுல வேற ஏதோ ஒரு விஷயம் இருக்கு. அதனால தான் என்னை மாமா கூட சேரச் சொல்றீங்க. அது என்னன்னு எங்கிட்டயாவது சொல்லுங்க'ன்னு கேட்கிறாள் துளசி.
என் பிரச்சனையை யாராலும் சரி பண்ண முடியாது. நான் வந்துட்டுப் போனது அன்புக்குத் தெரியக்கூடாது. அன்பு கண்ணை முழிச்சதும் நான் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்கன்னு கேட்கிறாள் ஆனந்தி. அதைப் போலவே துளசியும் ஆனந்தியின் கைமீது கை வைத்து சத்தியம் செய்து கொடுக்கிறாள்.
அப்போது அன்பு மயக்கநிலையில் இருந்து தெளிவுநிலைக்குத் திரும்பியபடி ஆனந்தி ஆனந்தின்னு முணங்குகிறான். துளசி டாக்டரை அழைத்து வருகிறாள். எனக்கு என்னாச்சுன்னு டாக்டரிடம் கேட்கிறான் அன்பு. சின்ன அடி பட்டுருக்கு. வேற ஒண்ணுமில்லன்னு ஆறுதல் படுத்துகிறார் டாக்டர். அப்புறம் துளசியிடம் இவர் நார்மலா ஆகிட்டாருன்னு சொல்கிறார் டாக்டர்.
அன்பு துளசியிடம் 'ஆனந்தியை எங்கே'ன்னு கேட்கிறான். 'ஆனந்தி வரல மாமா'ன்னு சொல்கிறாள் துளசி. 'ஆனந்தி இங்கே வந்தாள். எங்கிட்ட பேசினாள். அவள் குரல் எனக்குக் கேட்டுது. என்னால உணர முடிஞ்சது'ன்னு அன்பு சொல்ல ஆனந்தி வாசலில் இருந்து அதைக் கேட்டபடி இன்ப அதிர்ச்சியில் இருக்கிறாள். 'எனக்கு இப்படி ஆனது ஆனந்திக்குத் தெரியுமா? அப்போ எப்படி வராம இருப்பாள்?' என அன்பு கேட்கிறான். எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியணும். சொல்லு துளசின்னு அன்பு கேட்கிறான். அத்தை தான் ஆனந்தியை வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்கன்னு துளசி சொல்கிறாள்.
அதற்கு அன்பு 'அவள் எடுக்குற ஒவ்வொரு முடிவும் நல்லதாகத் தான் இருக்கும். அவளுக்கு என் மேல இருக்குற அன்பு என்னைக்குமே மாறாது. ஆனந்தியை நான் என்னைக்குமே விட்டுக் கொடுக்கமாட்டேன்'னு அன்பு துளசியிடம் சொல்கிறான். அதற்கு துளசி 'நீ எந்தளவு ஆனந்தியைக் காதலிக்கிறேன்னு தெளிவா புரிஞ்சிக்க முடியுது. நான் உங்க காதலை சேர்த்து வைக்கிறேன். இது நான் உனக்குப் பண்ணிக் கொடுக்குற சத்தியம்'னு சொல்கிறாள் துளசி.
அன்பு ஆனந்தியைப் பற்றிச் சொல்லச் சொல்ல அதைக் கேட்டபடி பிரிய முடியாமல் மெதுவாக மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறாள் ஆனந்தி. வார்டன் லட்சுமிக்கு வந்த மாத்திரைக்கும் நானே பில்லைக் கொடுத்துடுறேன்னு சொல்கிறாள்.
மேடம் உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு மெடிக்கல் கடைக்காரர் சுபாஷ் சொல்கிறார். அவர் வார்டனிடம் 'உங்க ஹாஸ்டல்ல இருந்து கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பொண்ணு மாத்திரை வாங்க வந்துச்சு. அது கர்ப்பமா இருக்குறவங்க வாங்கற மாத்திரை'ன்னு சொல்கிறார். அதைக் கேட்டு வார்டன் அதிர்ச்சி அடைகிறார்.
யார் அந்தப் பொண்ணுன்னு கேட்கிறார் வார்டன். ரெஜினா தான். அந்தப் பொண்ணோட அண்ணி யாருக்கோ வாங்கணும்னு சொல்லி வாங்கினது என்று சுபாஷ் சொல்கிறாள். அப்போது 'மறுபடியும் அந்த மாத்திரையைக் கேட்டு கடைக்கு யாராவது வந்தா எனக்கு உடனே தகவல் சொல்லுங்க'ன்னு வார்டன் சொல்கிறார். வார்டன் ஆனந்தியை சந்திக்க வேண்டும் என்று செக்யூரிட்டியிடம் சொல்கிறார்.
என்ன மேடம் ஒருமாதிரியா இருக்கீங்கன்னு கேட்கிறாள் ஆனந்தி. யோசிக்க வச்சிட்டாங்க. நான் ஆக்சுவலா ரெஜினாகிட்டதான் பேசணும்னு சொல்ல ஆனந்தியும் அங்கிருந்து சென்று விடுகிறாள்.
துளசியிடம் அன்பு 'என்னை ரூமில போய் விட்டுரு. மாத்திரை மட்டும் கொடு. நான் போட்டுக்குறேன்'னு சொல்கிறான் அன்பு. 'வெறும் வயித்துல எப்படிடா மாத்திரை போடுவே. கஞ்சியாவது குடி'ன்னு அன்புவின் அம்மா சொல்கிறாள். அன்பு துளசியை சாப்பிடச் சொல்கிறான். 'துளசி சாப்பிடலயா.. 'என அன்புவின் அம்மா அதிர்ச்சியில் கேட்கிறாள்.
மாமா கோபப்பட்டு சந்தோஷப்பட்டுப் பார்த்துருக்கேன். ஆனா இப்படி படுத்த படுக்கையா இருக்குற மாமாவை நான் பார்க்கவே இல்லை. எனக்கு ரொம்ப கஷ்டமாச்சு. அதான் நான் சாப்பிடவே இல்லை'ன்னு துளசி சொல்கிறாள். அப்போது அன்பு 'நான் சாப்பிட முடியுமான்னு தெரியல'ன்னு சொல்ல 'நீ சாப்பிட்டுத்தான் ஆகணும். இல்ல நான் சாப்பிட மாட்டேன்'னு துளசி சொல்கிறாள். அப்புறம் சரி நான் சாப்பிடுறேன்னு அன்பு சொல்கிறான்.
அப்போது அன்புவின் அம்மா 'துளசியோட அப்பா, அம்மாவுக்குப் போன் பண்ணிட்டியா'ன்னு யாழினியிடம் கேட்கிறாள். இப்போ எதுக்கு அவங்கள வரச் சொல்றே என அன்பு கேட்கிறான். அதற்கு அன்புவின் அம்மா 'நான் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி முடிவெடுக்கத் தான் அண்ணனையும், பவானியையும் வரச் சொல்லி இருக்கேன்'னு சொல்கிறாள் அன்புவின் அம்மா. அதைக் கேட்டு அன்பு அதிர்ச்சி அடைகிறான். இனி நாளைய எபிசோடில் நடப்பது என்ன என்பதைக் காணலாம்.