Singappenne: ஆனந்தி எவ்வளவோ சொல்லியும் ஊருக்கு வர மறுத்த வார்டன்... அன்பு, துளசி செய்த சத்தியம்!

By :  SANKARAN
Published On 2025-06-26 21:45 IST   |   Updated On 2025-06-26 22:20:00 IST

சிங்கப்பெண்ணே தொடர் சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடின் கதைச்சுருக்கம் விவரம் வருமாறு: மகேஷ் ஆனந்தி, அன்புவின் காதலைப் பற்றி அன்புவின் அம்மா லலிதாவிடம் விளக்கமாகச் சொல்கிறான். ஆனந்தி யார் தடுத்தாலும் என் புள்ளையை ஆஸ்பிட்டல்ல பார்க்க வராம இருந்துருப்பாளான்னு கேட்கிறாள் லலிதா.

அதற்கு துளசி ஆனந்தி தான் ஆஸ்பிட்டல்ல வந்து மாமாவோட நெற்றியில விபூதி வச்சாங்க. அவங்க பிரார்த்தனையும் கண்ல இருந்து வந்த கண்ணீரும்தான் மாமாவைப் பிழைக்க வச்சது. என்னை விட அதிகமாக மாமாவை அவ்ளவு நேசிக்கிறாங்க. நான் மாமாவோட வந்தா மாமா சந்தோஷமா இருப்பாருன்னு ஒரு கற்பனையில ஆனந்தி இருக்காங்க. ஆனா அன்புவோட சந்தோஷமே ஆனந்தியைக் கல்யாணம் பண்றதுல தான் இருக்கு.

நீங்க இவ்ளோ தூரம் பேசுறீங்கள்ல. நான் ஒரு வாய்ப்பு தர்ரேன். என்கிட்ட நாளைக்கு வந்து பேசச் சொல்லுன்னு லலிதா சொல்கிறாள். அப்போது மகேஷ் அவள் வர மாட்டாள். ஊருக்குப் போயிருக்கான்னு மகேஷ் சொல்கிறான். அவ அக்கா கல்யாணம் நடந்ததும் ஆனந்தி பழையபடி மாறிடுவான்னு சொல்ல எனக்கு அதுல நம்பிக்கை இல்லன்னு லலிதா சொல்கிறாள்.

ஆனந்தி கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பாங்க அத்தைன்னு துளசி சொல்ல சம்மதிக்கலேன்னான்னு லலிதா கேட்கிறாள். கண்டிப்பா சம்மதிப்பாங்கன்னு துளசி சொல்கிறாள். ஆனந்தியோட அக்கா கல்யாணம் முடிகிற வரைக்கும்தான். அதுவரைக்கும் நான் என் புள்ளையோட கல்யாணத்தை நிறுத்துறேன். அதுக்கு அப்புறம் ஆனந்தி சம்மதிக்கலன்னா அட்சதை போட்டு வாழ்த்தை நான் இருக்க மாட்டேன்னு லலிதா பயமுறுத்துகிறாள்.

அப்புறம் அவ சம்மதிக்கலன்னா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குவேன்னு வாக்கு கொடுங்க. இல்லன்னா என் முடிவு படிதான் நடக்கும்னு லலிதா சொல்கிறாள். ஜாதகம், ஜோசியத்தை விட உங்க காதல் பவர்புல். ஆனந்தியும், நீங்களும் ஒண்ணு சேருவீங்க. அதை யாராலும் தடுக்க முடியாதுன்னு துளசி சொல்கிறாள். மாமா, சத்தியம் பண்ணு. வேற வழியில்லன்னு அன்புவிடம் சொல்லி 2 பேரும் லலிதாவின் கைமேல் கையை வைக்கின்றனர்.

காயத்ரியோட அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. கொஞ்ச நாள்தான் அப்பாவுக்கு உடம்பு பரவாயில்லன்னு நிம்மதியா இருந்தா. இப்ப மறுபடியும் கவலைப்பட ஆரம்பிச்சிட்டா. நேரத்தை வீணடிக்காமல் பார்த்துப் போ. அங்கே போய் போன் போடு. ஒண்ணும் ஆகாது. பயப்படாதேன்னு ஆனந்தி வழி அனுப்பி வைக்கிறாள். அதே நேரம் காயத்ரி தன்னோட அப்பா சரியானதும் நான் நேரடியா கல்யாணத்துக்கு வந்துடறேன்னு காயத்ரி சொல்கிறாள்.

ஒவ்வொரு பொண்ணுக்கும் உறவுகளோடு வாழ எவ்வளவு போராட வேண்டியிருக்கு. ஆனா ஒரு சில மிருக ஜென்மங்கள் ஈசியா பொண்ணோட வாழ்க்கையை சீரழிச்சிடுதுன்னு சௌந்தர்யா சொல்கிறாள். அதற்கு, மிருக ஜென்மங்க கிட்ட இருந்து கொடுமையைத் தாண்டி ஒரு பொண்ணு வாழ்க்கையில ஜெயிக்கிறதுக்கு போராடித்தான் ஆக வேண்டி இருக்கு. போராடுவோம்னு சொல்கிறாள் ஆனந்தி.

ஆனந்தி ஊருக்கு வழி அனுப்பும்போது வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுத்தான் அனுப்பினோம். ஆனா உங்க ஆஸ்டல்ல அவ்ளோ பாதுகாப்பு இருக்கு. உங்க ஆஸ்டல்ல உங்க நிழல்ல இருக்குற பிள்ளைக எல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்மான்னு ஆனந்தியின் அம்மா சொன்னதை நினைத்துப் பார்க்கிறாள் வார்டன்.


'என்னை மன்னிச்சிடுங்கம்மா'ன்னு வார்டன் கிட்ட ஆனந்தி சொல்கிறாள். 'நான் பல பேருக்கு உன்னைப் பற்றி பெருமையா சொல்லிருக்கேன். என் மகளா நினைச்ச உன்னை என்னால பாதுகாக்க முடியலன்னு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு என்கிறாள் வார்டன். நீங்க இருக்குற தைரியத்துல தான் நான் இருக்கேன்னு ஆனந்தி சொல்கிறாள். உனக்கு எதுவுமே பண்ண முடியலங்கற கையாலாகாதத் தனத்தை நினைக்கும்போது அழுகையா வருது.

உங்க அம்மா, அப்பா என் மேல எவ்ளோ நம்பிக்கையை வச்சிருக்காங்க. என்னால இந்தக் குற்ற உணர்ச்சியைத் தாங்க முடியல'ன்னு வார்டன் சொல்கிறாள். அதே நேரம் 'என் அக்கா கல்யாணம் முடிகிற வரைக்கும் யாருக்கிட்டயும் சொல்லாதீங்க. எங்க அக்கா கல்யாணம் முடிகிற வரைக்கும் நீங்க என் கூட இருக்கணும். அப்படி இருந்தா என் பிரச்சனையை எல்லாம் மறந்து நான் சந்தோஷமா எங்க அக்காவோட கல்யாண வேலையை எல்லாம் செய்வேன்'னு ஆனந்தி அழுதபடி சொல்கிறாள்.

அதற்கு இல்ல ஆனந்தி என்னால உங்க அப்பா, அம்மாவை ஃபேஸ் பண்ண முடியாது. என்னையும் அறியாம நான் இந்த விஷயத்தைச் சொல்லிடுவேனோன்னு பயமா இருக்கு ஆனந்தி. மகேஷ்கிட்ட கூட சொல்லிடுவேனோன்னு பயமா இருக்கு. என்னால உன் ஊருக்கு வர முடியாது. நான் ஆஸ்பிட்டல் வந்து இப்ப வரைக்கும் தப்பு பண்ணிட்டோமோன்னு தோணுது. உன் வயித்துல உள்ள கருவை அழிச்சிருந்தா பிரச்சனை எல்லாம் போயிருக்கும் அல்லவான்னு அழுகிறாள் வார்டன்.

'நீங்களே இப்படி சொல்றீங்களே மேடம். தெரிஞ்சோ தெரியாமலோ என் வயித்துல ஒரு ஜீவன் உருவாயிடுச்சு. எப்படியும் அதை அழிக்கிற தப்பை நான் செய்ய மாட்டேன்'னு சொல்கிறாள் 'ஆனந்தி. இந்த உலகில் கடவுள்னு ஒருத்தர் இருந்தாருன்னா, நியாம், தர்மம் இருந்துச்சன்னா நிச்சயம் உன் பிரச்சனை தீரும் ஆனந்தி'ன்னு சொல்கிறாள் வார்டன். அதை மித்ரா ஒட்டுக் கேட்கிறாள்.

கர்ப்பத்தைக் கலைக்கிறதுக்குத் தான் அவள் போனாளா? அதை ஏன் இவங்க தடுத்தாங்க. தடுக்காம இருந்துருந்தா என் பிரச்சனை முடிஞ்ருக்குமேன்னு மித்ரா நினைக்கிறாள். அதே நேரம் பண்ணின பாவம் எல்லாம் போதும். இந்த பாவத்தையும் பண்ண வேண்டாம்னு மித்ரா மனதுக்குள் சொல்லியபடி அங்கிருந்து நகர்கிறாள். அடுத்து என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம். 

Similar News