சிங்கப்பெண்ணே: போடு ஆட்டத்தை... கோகிலாவே சொல்லிட்டாளே... கர்ப்பத்துடன் ஆனந்தி ஆடுவாளா?
சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் நடந்தது என்ன என்பதைப் பார்ப்போம். இந்த நிலைமையில வேலைக்குப் போய்த்தான் ஆகணுமான்னு துளசி அன்புவிடம் கேட்கிறாள். வீட்லயே இருந்தா மைன்ட் அப்செட் ஆகும். வேலைக்குப் போனா தான் நல்லதுன்னு சொல்லிக் கிளம்புகிறான் அன்பு.
அதே நேரம் ஆட்டோவில் வந்து அன்புவின் வீட்டு வாசலில் காத்து நிற்கிறாள் ஆனந்தி தோழிகளுடன். அன்பு பைக்கை எடுத்துவிட்டு வெளியே வருகிறான். ஸ்டார்ட் பண்ண அது மக்கர் பண்ணுகிறது. அப்போது அன்பு கர்சீப்பை விட்டு விடுகிறான். அதைப் பார்த்த ஆனந்தி அதை எடுத்துவிட்டு உங்களை விட்டுப் போறேன். உங்க நினைவா இதை வச்சி நான் வாழ்ந்துக்கறேன்னு அழுகிறாள் ஆனந்தி. அதே நேரம் கேட்டின் அருகில் அன்புவின் அம்மா திறந்து வெளியே வருகிறாள்.
துளசியும் உடன் வருகிறாள். இருவரும் வெளியே கிளம்பிச் செல்கின்றனர். ஆனந்தி ஒளிந்து கொண்டு என்னை மன்னிச்சிடுங்க அத்தைன்னு அவர்களது காலடி தடத்தில் விழுந்து வணங்குகிறாள். என் மேல நீங்க காட்டுன அன்பையும், பாசத்தையும் ரொம்ப மதிக்கிறேன். உங்களை ரொம்ப காயப்படுத் திட்டேன். என்னை மன்னிச்சிடுங்கன்னு சொல்லி கதறி அழுகிறாள். நான் உங்களுக்கு நல்ல மருமகளா வாழணும்னு ஆசைப்பட்டேன்.
ஆனா அதெல்லாம் நிறைவேறாமப் போச்சு. இந்தக் கடவுள் உங்களக்காவது நல்ல வாழ்க்கையைக் கொடுக்கட்டும்னு அழுதபடி ஆட்டோவில் ஏறுகிறாள்.
அன்பு வேலைக்கு வருவதைப் பார்த்து அலுவலகப் பணியாளர்கள் நீ ஏன் வேலைக்கு வர்றே? ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானேன்னு சொல்கிறார்கள். ஆனந்தி, சௌந்தர்யா இருவரும் அவங்க அக்கா கல்யாணத்துக்காக ஊருக்குப் போயிருக்காங்கன்னு அன்பு சொல்கிறான். யாருகிட்டயும் சொல்லல. அவளுக்குப் பிரச்சனை உடம்புல இருக்கா? மனசுல இருக்கான்னு தெரியல. என்ன இருந்தாலும் அவ பழைய ஆனந்தி இல்ல. ரொம்பவே மாறிட்டான்னு சொல்கிறான் அன்பு.
கண்டிப்பா ஆனந்தி அக்கா கல்யாணத்துக்குப் போய்த்தான் ஆகணும்னு முத்துவிடம் சொல்கிறான் அன்பு. ஆரம்பிச்சிட்டீங்களா? வெட்டிக்கதையை. இனி வேலை நடந்த மாதிரிதான்னு கருணாகரன் கொந்தளிக்கிறான். ஆனந்தி அக்கா கல்யாணம் ஆண்டாள் கல்யாணம். போய் புண்ணியத்தைத் தேடன்னு கமெண்ட் அடிக்கிறான் கருணாகரன். எல்லாரும் சேர்ந்து எல்லாம் போக முடியாது. நான் சொல்றவங்க மட்டும்தான் போறீங்க. ஒரே நாள் லீவு தான் என்று கண்டிஷன் போடுகிறான் கருணாகரன்.
அப்போது மகேஷ் கருணாகரன் 2 நாளுக்கு முன்னாடியே நாம கல்யாணத்துக்குப் போறோம். அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன் என்கிறான். இவரு வராம இருந்தாலே பெட்டர்னு முத்து சொல்கிறான். அன்பு உன்னோட ஹெல்த் எப்படி இருக்குன்னு கேட்கிறான் மகேஷ். எல்லாம் மன உளைச்சல்தான் சார்னு சொல்கிறான் அன்பு. கோகிலா கல்யாணம் முடிஞ்சதும் உன்னோட எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிடும். நம்பிக்கையோடு இருன்னு மகேஷ் சொல்லி விட்டுப் போய் விடுகிறான். அன்பு யோசித்தபடி எதையோ வெறித்துப் பார்க்கிறான்.
முகூர்த்தக் கால் நடும் வேளைக்கு முன்பாக சாமி படங்களுக்குப் பூஜை போட்டதும் அனைவரும் மனதார சூடத்தட்டை வணங்கித் தொட்டுக் கும்பிடுகின்றனர். பந்தக்கால் டும்பணி நடக்கிறது. அப்போது மேளதாளத்துடன் ஒரு கூட்டம் வருகிறது. அது யாராக இருக்கும்னு கோகிலா உள்பட பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
செயற்கைக்கால் பொருத்திய சிறுவன். 2 சிறுமிகள். ஒரு பாட்டி என அனைவரும் ஆடியபடி வருகின்றனர். இந்த மண்ணோட மகராசி ஆனந்தியை வரவேற்கத் தான் இதெல்லாம்னு பஞ்சவர்ணக்கிளி பாட்டி சொல்கிறாள். எங்ககிட்ட சொல்லலையேன்னு ஆனந்தியின் அப்பா சொல்கிறார். இப்போ ஆட்Nடுhவில் வந்துக்கிட்டு இருக்கிறாள ஆனந்தி.
அந்த வாந்து இறங்கிட்டாள்ல எங்க சைக்கிள் ரேஸ், சானியா மிர்சா, செவரக்கோட்டை சிங்கப்பொண்ணு என்கிறாள் பஞ்சவர்ணக்கிளி பாட்டி. அவளுக்கு மாலை அணிவித்து கூலிங்கிளாஸ் போட்டு வரவேற்கிறாள். எல்லாரும் கேட்க ஆனந்தி உன் ஆட்டத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. எனக்காக ஒரு ஆட்டத்தை ஆடுன்னு சொல்கிறாள். ஆனந்தியும் கூலிங்கிளாஸ் போட்டபடி இப்போ போடுங்க அடியைன்னு ஆட்டத்துக்குத் தயாராகிறாள். அடுத்து நடப்பது என்ன என்பதை நாளை மறுநாள் எபிசோடில் பார்க்கலாம்.
ஆனந்தி வயிற்றில் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் குத்தாட்டம் போடலாமா? அப்படி ஆடினால் கரு கலைந்து விடாதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.