Siragadikka Aasai: சீதா காதலால் உடையும் முத்து - மீனா வாழ்க்கை… ரோகிணி பிளான் பலமா இருக்கே!

By :  AKHILAN
Published On 2025-06-06 10:05 IST   |   Updated On 2025-06-06 10:05:00 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

சீதாவை செக் செய்த மருத்துவர் அவருக்கு பிபி அதிகமாக இருக்கு. இப்படியே போனா அவளுக்கு நெஞ்சுவலி வந்துடும் என்கிறார். இதை கேட்டு மீனா - இந்திரா அதிர்ச்சியடைய இப்போ இந்த மாத்திரையை கொடுத்து சரியா பாத்துக்கோங்க என்கிறார்.

வெளியில் வரும் மீனா நாமளே இதுக்கு காரணம் ஆகிட்டோம் என்கிறார். என்னடி இப்படி சொல்ற எனக் கேட்க அவ விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ முடியலையே. நீ என்னம்மா நினைக்கிற அருணை பத்தி எனக் கேட்க நல்ல பையனா இருக்கான்.

ஆனா மாப்பிள்ளைக்கு பிடிக்கலையே என்கிறார். இவரும் அவரும் மாத்தி மத்தி பிரச்னை பண்ணி இருக்காங்க. நீ அவரிடம் பேசுமா என்கிறார். ரோகிணி வீட்டில் மனோஜுக்கு சாப்பாடு கொடுத்து கொண்டு இருக்க விஜயா நீ ஏன் இதை செய்ற எனக் கடுப்படிக்கிறார். எப்போ ஷோரூம் போற என மனோஜிடம் கேட்கிறார்.

அவர் என்னமோ சொல்ல விஜயாவுக்கு புரியாமல் ரோகிணி தனக்கு சாதகமாக என்னை ஷோரூம் கூட வரச்சொல்லுவதாக சொல்கிறார். இதை சாக்கா வச்சு உனக்கு தோன்றதை சொல்லாத என்கிறார். இல்ல ஆண்ட்டி மனோஜ் தான் அப்படி சொல்றான் என்கிறார். 

 

விஜயா அப்படியா எனக் கேட்க ஆமாம் என தலையாட்டுகிறார். இந்த நிலைமைல நீ ஏன் போகணும். அவளே போகட்டும் எனக் கூறிவிடுகிறார். பின்னர் சீதாக்கு எப்படி இருக்கு எனக் கேட்க மீனா இப்போ பரவாயில்லை என்கிறார். உடனே விஜயா என்ன ஆச்சு அந்த பொண்ணுக்கு என்கிறார்.

எதாவது உடம்புக்கு செக் செய்து இருப்பாங்க என சமாளித்து அனுப்புகிறார். விஜயா சென்றதும் மீனாவிடம் சீதா விஷயமா அவளிடம் எதுவும் சொல்லவில்லை என்கிறார். முத்து மனசு மாறுச்சா எனக் கேட்க இல்ல மாமா அவர் அப்படியே தான் இருக்காரு என்கிறார்.

அண்ணாமலை சென்று விட முத்து சாப்பாடுடன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். ஹோட்டல் சாப்பாடு வாங்குன நீங்க வீட்டுக்கு எதுக்கு எடுத்துட்டு வரீங்க என்கிறார். உன்னை வெறுப்பேத்த தான். என்னை சத்தம் போட கூடாதுனு அனுப்புனீயே என்கிறார்.

உங்களை மட்டும் இல்ல அவரையுமே அனுப்பிட்டோம் என்கிறார். என்ன திட்டி அவனை சமாதானமா அனுப்பி வச்சீங்களா என்கிறார். நான் மாமாக்கிட்டையே இது பத்தி பேசுறேன் எனக் கூறி மீனா போக முத்துவும் வா கேட்போம் என்கிறார்.

அண்ணாமலையிடம் சொல்ல முத்து தன்னுடைய காரை எடுத்து சென்று கை அடிப்பட்ட கான்ஸ்டபிளுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க சென்றேன். அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது இந்த அருண் அவன் மேலதிகாரியையே கட்டம் கட்டி பழி வாங்கியதாக சொல்கிறார்.

இப்ப சொல்லுங்கப்பா. பழி வாங்குறது இந்த இகோ பிடிச்ச ஆளுக்கு எப்படி சீதாவை கட்டி வைக்கிறது என்கிறார். மீனா அவரிடம் சில தப்பான குணம் இருந்தாலும் எனக்கு அந்த பூ ஆர்டருக்கு சீதாக்கு ஒரு லட்சம் இவர் தான் கொடுத்தார் என்கிறார். இதனால் முத்து கோபமடைகிறார்.

Tags:    

Similar News