பிரியங்காவுக்கு விழுந்த செருப்படி... கோமாளிக்கும் குக்குக்கும் என்ன சம்பந்தம்? ஷாக்கிங் தகவல்!

ஒரு பிரபல தொலைக்காட்சியில் பிரியங்கா ஆங்கராக பணிபுரிந்து வருகிறார். அவரைக் குற்றம்சாட்டி ஆங்கர் மணிமேகலை கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இது பெரிய அளவில் வைரலாகியுள்ளது. இதுபற்றி என்ன நினைக்கிறீங்கன்னு மூத்த பத்திரிகையாளர் உமாபதி என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

15வருஷத்துக்கு முன்னாடி நம்பர் 1 டிவி 100வது இடத்துல இருக்கு. நம்பர் 2 டிவி 10வது இடத்துல இருக்கு. 100க்கு நம்பர் 1 டிவி 90 மார்க் இருந்துச்சுன்னா 2வதா வருவது 25 மார்க் தான் எடுத்தது. அந்த வகையில் அந்த சேனலை நெருக்கமாகக் கொண்டு வந்து 2வது இடத்திற்கு வந்து டஷப் கொடுத்தது ஒரு நபர் தான்.

மீ டூ கும்பல் எவனை மடக்குனா நாம வாழ்க்கையை நடத்த முடியும்? அதனால டாப்ல உள்ளவரை கைக்குள்ள போட்டுட்டு அவனை அடிமையாக்குறது, சம்பாதிக்கிறது, கார், பங்களா வாங்கினா யாரும் கேட்க மாட்டாங்க.

Also read: குக்கா வந்தா சமையல் மட்டும் பண்ணனும்! பிரியங்காவின் அடாவடி.. பிரபலம் சொன்ன தகவல்

ஆனா டாப்ல உள்ளவனைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு அவனை அடிமையாக்கி, டம்மி பீஸாக்கி, அவனோடு அதிகாரத்தைக் காமிச்சி மற்றவங்களும் உன்னோட கட்டுப்பாட்டுல இருக்கணும், தன்மானம் உள்ளவங்களை அவமானப்படுத்தணும்னு நினைச்சா செருப்படி தான் விழும்.

பவர்ல இருக்குறவனைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு டாப்ல இருக்குறவங்களை திறமையால் முன்னுக்கு வந்தவர்களை டார்ச்சர் பண்றதுங்கறது யாராவது செருப்பைத் தூக்கிடுவாங்கங்கறது தான் இந்த மணிமேகலை பஞ்சாயத்து.

இன்னைக்குப் பலரும் இந்தச் சேனல்ல போய் ஆங்கர் பண்ணினா சீக்கிரம் ரீச்சாயிடலாம்னு நினைக்கிறாங்க. அதனால அங்கு டாப்ல இருக்குறவங்க தான் அப்படிப்பட்ட ஆங்கரை செலக்ட் பண்ணுவாங்க. அவங்களைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு ஆங்கர் பிரியங்கா பலருடைய வாழ்க்கையையும் ஒழிச்சி விட்டுருக்காங்க.

Priyanka

Priyanka

முதல்ல டிடி இருந்தாங்க. அவங்களுக்கு உடல்நிலை சரியில்லன்னதும் அந்த இடத்தைப் பிடிச்சது இந்த லேடி. 20வருஷத்துக்கு முன்னால இருக்கும்போது நான் அங்க ஒர்க் பண்ணிருக்கேன். அவங்க ஸ்டார் குரூப்புக்கு மாறினதுக்கு அப்புறம் நான் வேற சேனலுக்குப் போயிட்டேன். அந்தக் காலகட்டத்துல அந்த சேனல் எப்படி இருந்தது?

இப்போ எப்படி ஆகியிருக்குங்கறதை அங்குள்ள திறமை வாய்ந்த நாலைந்து பேர் கொண்ட டீம் தான் கொண்டு வந்தது. அவர்களைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு பிரியங்கா பண்ற அட்டகாசம் தான் இது. முழு பேரு பிரியங்கா தேஷ் பாண்டே. முதலில் பிரியங்கா, தேஷ், பாண்டே என 3 பேரு.

தேஷ் பாண்டே வெளியே தெரிந்ததும் எல்லாரும் மிரண்டு போயிடறாங்க. இந்தளவு பிரபலமான விஜய் டிவி ஒரு பெண்ணால நாசமா போயிடுமோன்னு நிலை இப்போ வந்துருக்கு. இப்போது தேஷ் பாண்டேன்ற பூனைக்கு மணிமேகலை என்ற பொண்ணு போய் மணியைக் கட்டிவிட்டுருச்சு.

கோமாளிக்கும் குக்குக்கும் என்ன சம்பந்தம்னு தெரியல. இப்படி எல்லாம் டைட்டில் வச்சி என்னத்தைப் பண்றாங்கன்னே தெரியல. அவங்களாவே லூஸ் மாதிரி கைதட்டிக்கிறாங்க. அதையும் வாயைப் பிளந்துக்கிட்டுப் பார்க்குறாங்க. டிஆர்பி ஏறுது.

இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டு வந்து இவ்ளோ பேர முட்டாளாக்கிறதுக்கு 15 வருஷம் ஆகியிருக்கு. அதனால இப்படி ஒரு பெண்ணை வைத்து லூஸ் பண்ணிடாதீங்க. இதுவே சேனலின் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடும். அதனால சீக்கிரம் நடவடிக்கையை எடுத்தா நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it