Connect with us

Cinema News

அனிருத் வேண்டவே வேண்டாம்.. கமலிடம் அடம் பிடிக்கும் இயக்குனர்.! சிவகார்த்திகேயன் கோச்சிக்க போறார்…

கமல்ஹாசன் அடுத்ததாக தனது ராஜ் கமல் நிறுவனத்தின் மூலம் மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிக்க உள்ளார். அதன் படி, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தை அவர் அடுத்து தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இவர் இதற்கு முன்னர் ரங்கூன் எனும் திரைப்படத்தை இயக்கியவர். இந்த படத்திற்கு முதலில் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்க உள்ளதாக இருந்தது.

நடுவில் விக்ரம் பேய்த்தனமான் ஹிட் ஆகியுள்ளதால், அதில் அனிருத் இசை பலராலும் பாராட்டப்படுவதால் மீண்டும் அனிருத்தை அணுகலாம் என கமல் முடிவு எடுத்தாராம். ஆனால் இந்த விஷயம் இயக்குனருக்கு பிடிக்கவில்லையாம்.

இதையும் படியுங்களேன் – உதயநிதிக்கே செக் வைத்த லைகா.. ஐயா எங்ககிட்ட பணம் இல்ல.. இனி நீங்களே பாத்துக்கோங்க…

அனிருத் கைவசம் பெரிய பெரிய பட்ஜெட் படங்களே வரிசையில் நிற்கின்றன. இதில் இந்த படமும் சேர்ந்துவிட்டால் எப்போது இசை வாங்குவது எப்போது படம் ரிலீஸ் செய்வது குறிப்பிட்ட தேதி மாறிவிடும் அதனால் வேண்டாம் ஹாரிஸ் ஜெயராஜ் போதும் என கூறிவருகிறாராம் இயக்குனர்.

இந்த விஷயம் எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு தெரியுமா? தெரிந்தால் நண்பர் அனிருத்தை வேண்டாம் என சொன்னதுக்கு கோபித்து கொள்ள போகிறார் என கிண்டலாக கோடம்பாக்கத்தினர் கிசுகிசுக்கின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top