More
Categories: Cinema News latest news

தெலுங்குல இனி தேறாது!.. மலையாள கரையோரம் ஒதுங்கிய அனுஷ்கா!.. அடேங்கப்பா அந்த இயக்குநர் படமா?..

பாகுபலி 2ம் பாகத்துக்கு பிறகு கிட்டத்தட்ட சினிமாவை விட்டே காணாமல் போன அனுஷ்கா மீண்டும் கடந்த ஆண்டு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என டைட்டிலிலேயே தெலுங்கு வாடை அடிக்கும் விதமாக வைத்து படத்தில் நடித்து வெளியிட்டார்.

ஆனால், அந்த படம் செல்ஃப் எடுக்காமல் சொதப்பிய நிலையில், அப்செட்டான அனுஷ்கா அடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி போடலாம் என பார்த்தால் யாருமே அனுஷ்காவை இப்போதைக்கு கிட்டவே சேர்க்கப் போவதில்லை என்கிற முடிவில் உள்ளனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: அச்சச்சோ!.. மஞ்சுமெல் பாய்ஸ் ஹீரோ இந்த தமிழ் இயக்குநரிடமா சிக்கி விட்டார்.. என்ன ஆகப்போகுதோ?

இந்நிலையில், அப்படியே ஜோதிகாவை போல அனுஷ்காவும் மலையாளப் பக்கம் ஒதுங்கியிருக்கிறார். அங்கே ஒரு படத்தை ஹிட் கொடுத்து விட்டால், அடுத்து பாலிவுட்டுக்கும் செல்லும் ஐடியா ஏதாவது இருக்குமோ என்னவோ என ரசிகர்கள் பேசிக் கொள்கின்றனர்.

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ஹோம் படத்தை இயக்கிய ரோஜின் தாமஸ் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஜெயசூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக காத்தனார் எனும் படம் உருவாகிறது.

இதையும் படிங்க: ஒரு பாட்டுக்கு நடனமாட ஒரு மாதம் பயிற்சி எடுத்த எம்.ஜி.ஆர்!.. தலைகுணிந்து வணங்கிய நடிகை…

அந்த படத்தில் லீடு ரோலில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகி உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு புகைப்படங்களுடன் வெளியாகி உள்ளன. கையில் கிருஷ்ணர் சிலையுடன் அனுஷ்கா படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடன் எடுத்துக் கொண்ட ஒரு படமும், படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவும் வைரலாகி வருகிறது.

42 வயதாகும் அனுஷ்கா இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். முதன்முறையாக அனுஷ்கா மலையாளப் படத்தில் நடிக்கப் போவது குறிப்பிடத்தக்கது.

காத்தனார் – தி வைல்ட் சார்சரர் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் அருந்ததி, பாகமதி போல பிரம்மாண்ட படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Saranya M

Recent Posts