தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்து தமிழ் சினிமாவே போற்றும் நடிகராக மாறினார். சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியதோடு இல்லாமல் அரசியலிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தினார். மக்கள் மத்தியில் ஒரு அடுத்த எம்ஜிஆராகவே பார்க்கப்பட்டார் விஜயகாந்த்.
கருப்பு எம்ஜிஆர் என்றே அழைத்தனர். மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவராகவும் ஏழை எளிய மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பவராகவும் இருந்தார். நடிகர்களிலேயே மிகவும் மதிக்கத்தக்க நல்லவராகவும் இருந்தார் விஜயகாந்த். ஆனால் சினிமா தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் ஒரு தகவலை பகிர்ந்தார்.
விஜயகாந்தை மட்டும் நல்லவர் என சொல்கிறீர்களே? அவரை விட மிகவும் நல்லவர் நடிகர் பிரபு என மாணிக்கம் நாராயணன் கூறினார்.அதாவது அஜித்தை வைத்து அசல் என்ற படத்தை சிவாஜி புரடக்ஷன் சார்பாக பிரபு தயாரித்தாராம். அவ்வளவுதான் மொத்த அசலையும் இழந்தார் பிரபு என மாணிக்கம் நாராயணன் கூறினார். மேலும் சிவாஜி புரடக்ஷனுக்காக ரஜினி சந்திரமுகி படத்தில் நடித்துக் கொடுத்தார்.
ஆனால் அஜித் என்ன செய்தார்? என கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் பெரிய ராஜாங்க குடும்பமாக இருந்த பிரபு குடும்பம் இப்பொழுது ஏதோ சறுக்கலில் இருப்பதாகவும் மாணிக்கம் நாராயணன் கூறினார்.
எல்லாரையும் நம்புபவர் பிரபு. மிகவும் நல்லவர். அவரை மாதிரி யாரையும் இந்த தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது என மாணிக்கம் நாராயணன் கூறியிருக்கிறார்.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…