Connect with us

Cinema History

இளையராஜா இதை செய்யவே மாட்டார்… அதனாலே நடுக்கமா இருக்கும்… ஆனா? ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன தகவல்!

கோலிவுட்டில் இசையில் மாஸ்டர் என்றால் அது இளையராஜா தான். அவரது மெல்லிசை பாடலுக்கு அடிமையானவர்களே கிடையாது. அத்தனை பேரை கட்டி வைத்திருக்கும் இளையராஜா குணத்தால் அமைதியானவர் இல்லை என்று தான் பேச்சுகள் இருக்கிறது.

தன்னுடைய இசையை யாரும் பயன்படுத்த கூடாது. அப்படி மீறி செய்தால் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என பல பிரச்னையை செய்து இருக்கிறார். அவரின் நெருங்கிய நண்பர் எஸ்.பி.பி கிட்டையே கறார் காட்டி அவரையே வருத்தப்பட வைத்தவர். தன் தொழில் வேறு நட்பு வேறு என்பதில் தெளிவாகவே இருப்பார்.

இதையும் படிங்க: லோகேஷ் கையிலெடுக்கும் ரோலக்ஸ்!.. வெறித்தனமா களமிறங்கும் சூர்யா!.. பரபர அப்டேட்!…

இளையராஜாவின் இசைக்குழுவில் வேலை செய்து விட்டு ரோஜா வாய்ப்பு மூலம் சினிமாவிற்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தினையே படைத்து விட்டார். கிட்டத்தட்ட இசையின் கமல்- ரஜினி, எம்.ஜி.ஆர்-சிவாஜி ரேஞ்சுக்கு பேசப்படுபவர்கள் தான் இருவரும். ஆனால் பெரிதாக ஒருவரை பற்றி இன்னொருவர் பேசிக்கொண்டது கிடையாது. சில இசை நிகழ்ச்சிகளில் சந்தித்து கொண்ட புகைப்படமே வைரலாகியது.

இந்நிலையில் சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜா குறித்து பேசியது மிகப்பெரிய வைரலாகி வருகிறது. அவர் பேசியது, பொதுவாகவே இசை கலைஞர்கள் மீது ஒரு பிம்பம் இருக்கும். அதாவது நிறைய தண்ணி அடிப்பார்கள். போதை போடுவார்கள். பெண் பித்தன் என அனைத்து கெட்டப்பழக்கமுமே இருக்கும் என பேசுவார்கள்.

இதையும் படிங்க: சூடு பிடிக்கும் லியோ புரமோஷன்!.. 1000 கோடி டார்கெட். பக்கா ஸ்கெட்ச் போடும் லோகேஷ்..

இதனாலே அவரை பார்த்தாலே பயம் வரும். அவர் தான் என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றார். தன்னுடைய போட்டி கலைஞர் என்றாலும் அவரின் அனுபவத்திற்கு மரியாதை கொடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது வைரலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top