சிம்பு நடிக்கும் ஒரு படம் அறிவிக்கப்பட்டு, அது படப்பிடிப்பு துவங்கி எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்து எந்த சிக்கலும் இல்லாமல் படம் வெளியானதாக இதுவரை சரித்திரம் இல்லை. சிம்புவின் படங்களுக்கு அவரே எமனாக இருப்பார், ஒழுங்காக ஷூட்டிங் போக மாட்டார்.. திடீரென அதிக சம்பளம் கேட்பார்.. தயாரிப்பாளருடன் பிரச்சனை செய்வார் என சிம்புவை பற்றி பல புகார்கள் இப்போதும் திரையுலகில் உண்டு.
எனவேதான் சிம்பு நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாவது இல்லை. பத்து தலை படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கழித்து தக் லைப் வந்தது. அந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை.
அந்த படம் வெளியாகி ஆறு மாதங்கள் கழித்து இப்போதுதான் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் ஷூட்டிங் துவங்கியிருக்கிறது.
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்க அரசன் என்கிற படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல மாதங்கள் பல காரணங்களால் ஷூட்டிங் துவங்கப்படவில்லை
. சிம்புவோ துபாயிலேயே இருந்தார். அதேநேரம் அந்த படத்தின் புரோமோஷன் வீடியோ மட்டும் வெளியானது.
கடந்த 2 வருடங்களாக நீண்ட தலைமுடி, தாடி வளர்த்திருந்த சிம்பு தற்போது அதை எல்லாம் மழித்துவிட்டு சாக்லேட் பாய் லுக்குக்கு மாறியிருக்கிறார். மலேசியாவில் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு சென்று சிம்பு அஜித்தை சந்தித்த புகைப்படங்களும் வெளியானது.
ஒருபக்கம், சமீபத்தில் அரசன் படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் துவங்கியது. தற்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…