Categories: latest news

அருண்விஜய்க்கும் சரி, இயக்குனர் பாலாவுக்கும் சரி… இது தான் கம்பேக்… அடித்துச் சொல்லும் பிரபலம்..!

அருண் விஜய்க்கு நீண்ட நாள்களாக எந்தப் படமும் சொல்லும்படியாக வரவில்லை. அவரும் எவ்வளவோ மெனக்கிட்டுத் தான் பார்க்கிறார். என்னை அறிந்தால், மாஞ்சாவேலு, தடையறத் தாக்க, தடம் ஆகிய படங்களில் நன்றாகத் தான் நடித்தார். 2001ல் அவர் நடித்த பாண்டவர் பூமி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன்பிறகு தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய ஹிட்டை அவர் படம் தரவில்லை என்றே சொல்லலாம். அந்தக் குறையைப் போக்கும் வகையில் தற்போது பாலாவின் இயக்கத்தில் வருகிறது வணங்கான். ஆரம்பத்தில் இந்தப் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது.

இதையும் படிங்க… விடுதலை 2 படம் செய்த அந்த மகத்தான சாதனை… எப்படி இதெல்லாம் நடக்குது…? நம்பவே முடியலையே…!

அதன்பிறகு கதையில் ஏற்பட்ட மாற்றங்களால் அவருக்குப் பதிலாக அருண்விஜய் மாற்றப்பட்டார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்து வருகிறார். ‘வணங்கான்’ படம் எப்படி வந்துள்ளது என்ற கேள்விக்கு ஒரு யூடியூப் சேனலில் வலைப்பேச்சு அந்தனன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

‘பி’ ஸ்டுடியோ என்ற பெயரில் இயக்குனர் பாலா தயாரித்து, கதை எழுதி இயக்கிய படம் வணங்கான். அருண் விஜய் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி, ரிதா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

வணங்கான் படம் ரொம்ப பிரமாதமா இருக்கு. ரொம்ப அல்டிமேட்டா இருக்கு. அருண்விஜய் வாய் பேச முடியாத கேரக்டர். டயலாக் எல்லாம் கிடையாது. இது அருண் விஜய்க்கும், பாலாவுக்கும் கம்பேக் தான். படத்தைக் கொஞ்ச நேரம் பார்த்தேன். அதுக்கான வாய்ப்பு கிடைச்சது. பழைய பாலா திரும்ப வந்துட்டாருன்னு சொல்ற அளவுக்கு வந்துருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Vanankaan

இயக்குனர் பாலாவின் ஆரம்ப கால படங்கள் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி வரை படம் படுமாஸாக உள்ளது என்று ரசிகர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. அதன்பிறகு வந்த தாரை தப்பட்டை பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. நாச்சியார் படமும் அப்படித்தான். இந்தப் படம் 2018ல் வெளியானது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது வணங்கான் படம் அவரது இயக்கத்தில் வருவதால் இது நிச்சயம் அவருக்குக் கம்பேக் தான் என்கின்றனர். இயக்குனர் பாலாவைப் பொருத்தவரை கதாநாயகனாக நடிக்கப் போகிறவர் அவரிடம் தன்னை ஒரு 3 ஆண்டுகளாவது அர்ப்பணித்து விட வேண்டும். அப்போது தான் அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

 

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago