---Advertisement---

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

Published on: April 2, 2026
aswath
---Advertisement---

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின் பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கினார். இந்த படம் 100 கோடி வசூலை பெற்றது.. இதையடுத்து கவனிக்கத்தக்க இளம் இயக்குனராக மாறியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலகியபோது ரஜினிக்கு கதை சொன்ன இயக்குனர்களில் அஸ்வத் மாரிமுத்துவும் ஒருவர். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும் ஏனோ டேக் ஆப் ஆகவில்லை. அதேநேரம், இந்த கதையில் நான் அல்லது கமல் மட்டுமே நடிக்க முடியும் என சொல்லியிருந்தார். அதேபோல், விஜயும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால், அவர் அரசியலுக்கு சென்றுவிட்டதால் அது நடக்கவில்லை. தற்போது சிம்புவின் அடுத்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார்..

இந்நிலையில்தான், நடிகர் சிவகார்த்திகேயன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டு நண்பர் மூலம் அவருக்கு தூது விட்டிருக்கிறார்.. ஆனால் முதல் பேச்சு வார்த்தையிலேயே முடியாது என மறுத்து விட்டாராம் அஸ்வத். ‘அரசன் படம் முடிந்தவுடன் சிம்பு நடிக்கவுள்ள படத்தை இயக்கப் போகிறேன். எனவே சிவகார்த்திகேயன் படத்தை இயக்க முடியாது’ என்றெல்லாம் பூசி முழுகாமல் மிகவும் ஓப்பனாக பேசி அந்த வாய்ப்பை அஸ்வத் மறுத்ததாக சொல்லப்படுகிறது.

‘நிறைய இயக்குனர்களை சிவகார்த்திகேயன் கூப்பிட்டு படம் பண்ணுவதாக சொல்லி நம்பிக்கை கொடுத்து சில வருடங்கள் காக்கவைத்து வீணடித்திருக்கிறார்.. அவரை நம்பி நான் வருடக்கணக்கில் காத்து கொண்டிருக்க முடியாது’ என்று சொல்லிவிட்டாராம் அஸ்வத்
.

அஸ்வத் மாரிமுத்து சொல்வதும் உண்மைதான். ஏனெனில் சிபி சக்கரவர்த்தி, பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், வெங்கட் பிரபு, அயலான் ரவிக்குமார் போன்ற இயக்குனர்களையும் வருடக் கணக்கில் காத்திருக்க வைத்து அவர்களின் படங்களில் நடிக்காமல் போனவர்தான் சிவகார்த்திகேயன்.. எனவே மிகவும் உஷாராக இந்த முடிவை அஸ்வத் மாரிமுத்து எடுத்திருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்..