கூளி படத்திற்கு பின் ரஜினி அடுத்து சிபி சக்ரவர்த்தி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மகல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. முன்னதக சுந்தர்.சி ய்கக்குவதாக அறிவிப்பு மற்றும் வீடியோ வெளியனது . ஆனல் அவர் விலகவே சிபி சக்ரவர்த்தி உள்ளே வந்தார்.
தலைவர் 173 படத்திற்காக சுந்தர்.சி விலகியதும் பல இயக்குனர்களிடம் ரஜினி கதை கேட்டு வந்தார். அவர்களில் ஒருவர் அஸ்வத் மாரிமுத்துவும் ஒருவர். விஜய்சேதுபதி நடித்த ஓ மை கடவுளே, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்து சூபப்ர் ஹிட் ஆன டிராகன் படங்களை இயக்கியவர் இவர். இவர்து கதை ரஜினிக்கு மிகவும் பிடித்தது எனக் கூறப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ இவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து தலைவர் 173 தொடர்பாக சமீபத்தில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியபோது,
ரஜினியிடம் சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் இந்தப் படத்தின் கதையை கூறினேன். அவரும் மிகவும் விருப்பமாக கதையை கேட்டார். கதையின் முதல் பாதியைக் கேட்டுக்கொண்டிருந்த ரஜினி, குறிப்பாக இடைவேளை காட்சியின் விறுவிறுப்பால் மிகவும் ஈர்க்கப்பட்டார். கதையின் மீதான அதீத ஆர்வத்தால், வழக்கமாகத் தான் சாப்பிடும் மதிய உணவைக் கூடத் தவிர்த்துவிட்டு, அடுத்த என்ன நடக்கும் என்ற ஆவலில் முழு கதையையும் ரஜினி அமர்ந்து கேட்டார் என்று அஸ்வத் கூறியுள்ளார்.
மேலும் முழு கதையையும் கேட்டு முடித்த ரஜினிகாந்த், கதை மிகவும் அற்புதமாக இருப்பதாகவும், இது ஒரு Extraordinary கதை என்றும் அஸ்வத் மாரிமுத்துவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். ரஜினி மற்றும் தயாரிப்பாளர் கமல் ஆகிய இருபெரும் ஜாம்பவான்களுக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்துப்போன போதிலும், சில தவிர்க்க முடியாத நடைமுறைச் சூழல்கள் மற்றும் கால்ஷீட் நெருக்கடிகள் காரணமாக இந்தப் படம் தற்போதைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கதை சில சூழ்நிலைகளால் இப்போது தள்ளிப் போயிருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இந்தக் கதையை நிச்சயமாக ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் ஆகிய இருவரில் ஒருவரை வைத்துப் படமாக்கியே தீருவேன் எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…