More
Categories: Cinema News latest news

டிஷ்கஷனுக்கே இவ்வளவு செலவா?!.. அட்லி செஞ்ச வேலையில் அதிர்ச்சியான பிரபல தயாரிப்பாளர்…

Atlee: தமிழ் சினிமாவில் எடுத்த எல்லா படங்களுமே ஹிட். ஷாருக்கானால் பாலிவுட் எண்ட்ரி கொடுத்து அங்கும் ஹிட்  என மாஸாக இருக்கும் இயக்குனர் அட்லீ. தன்னுடைய தொடக்க காலத்திலே ஒரு சில விஷயத்தினை ஃபாலோ செய்தாராம்.

கோலிவுட்டில் ராஜா ராணி படத்தினை இயக்கியவர் அட்லீ. முதல் படமே ஹிட் கொடுத்தார். இருந்தும் படம் மௌனராகத்தின் எனக் கிசுகிசுத்த கூட்டமும் இருந்தது. இதனை எல்லாம் அட்லீ கண்டுக்கொள்ளவே இல்லை. இதை தொடர்ந்து அவர் இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களில் தமிழில் ரிலீஸ் ஆனது.

Advertising
Advertising

இதையும் படிங்க: குடிச்சு கூத்தடிக்கிறது ஒரு படமா? மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்த பிரபலம்

கோலிவுட்டின் டாப் நாயகனான விஜய் தான் மூன்றிலுமே நடித்து இருந்தார். அட்லீயை நம்பி தொடர்ச்சியாக  வாய்ப்புகளை கொடுத்துக்கொண்டே வந்தார். அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அட்லீயும் எல்லா படத்தினையுமே ஹிட் கொடுத்தார். ஆனாலும் காப்பிகேட் என்ற பிரச்னையும் அவரை தொடர்ந்தே வந்தது.

இதையடுத்து ஷாருக்கானின் நடிப்பில் ஜவான் படத்தினை பாலிவுட்டில் இயக்கினார். அப்படமும் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. 1000 கோடி வசூலை குவித்தது. இதனால் அட்லீ தற்போது பாலிவுட்டிலும் வாண்டட் இயக்குனராகி இருக்கிறார்.

ஆனால் அட்லீ இப்படி உயரத்துக்கு வர காரணம் அவரிடம் இருந்த ஒரு குணம் தானாம். அதாவது, அட்லீ தன்னை எப்போதுமே பெரிய இயக்குனராகவே கருதினாராம். எதுவும் விழாக்களில் விஜயிற்கு 10 பவுன்சர்கள் இருந்தால் தனக்கும் 10 பேரை கூட்டி வந்து நிறுத்தி கொள்வார்.

இதையும் படிங்க: மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் மீது Metoo புகாரளித்த நடிகை.. பிரபலம் ஆகிட்டாலே பிரச்னை தானா?…

அதுமட்டுமல்லாமல், ராஜா ராணி திரைப்படம் முடிந்து இன்னொரு படத்துக்கான கதை விவாதத்தில் இருந்தார் அட்லீ. அவரை தன்னுடைய படத்துக்காக கலைப்புலி எஸ் தாணு அழைத்து வந்தாராம். அப்போ முதல் தயாரிப்பாளர் நான் கதை விவாதத்துக்கு நிறைய செலவு செய்திருக்கேன் எனக் கூறுகிறார்.

ஆயிரங்களில் இருக்கும் என நினைத்த தாணு நானே ‘அதை தந்துவிடுகிறேன்’ என்கிறார். வந்த பில்லை பார்த்து நெஞ்சே அடைத்துவிட்டதாம். கதை விவாததுக்கு மட்டுமே 80 லட்சம் செலவு செய்து வைத்தாராம். அதாவது தன்னை முதல் படத்தில் இருந்தே பெரிய ஆளாகவே நினைத்து வந்து இருக்கிறார் அட்லீ.

கங்கா சந்திரமுகியா நின்னா, நடந்தா சந்திரமுகியா ஆகிட்டா என்ற டயலாக் மாதிரி தன்னை பெரிய இயக்குனரா நினைத்தார். அதுப்போலவே சீன் காட்டினார். தற்போது அம்பானி வீட்டு விழாவில் கலந்துக்கொள்ளும் அளவுக்கு பெரிய உச்சம் அடைந்து விட்டார் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: வடிவேலு செஞ்ச காரியத்துக்கு அரிவாளை தூக்கி வெட்டப் போன நடிகர்! இந்தளவுக்கு நடந்திருக்கா?

Published by
Akhilan

Recent Posts