கோலிவுட் ஹீரோயினே வேண்டாம்… ஏ6ல் களமிறங்கும் அக்கட தேச நடிகைகள்… ஓவருதான்!

Atlee: அட்லீ இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகைகள் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி தமிழ் ரசிகர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தாலும் அப்படம் மௌன ராகத்தின் காப்பி என ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. இனி தொடர்ந்து அவருக்கு தொடர்ச்சியாக மூன்று படங்களில் வாய்ப்பு கொடுத்தார் நடிகர் விஜய்.
தெறி, மெர்சல், பிகில் என கமர்சியல் சூப்பர் ஹிட் படங்களை அட்லீ இயக்கி இருந்தார். படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் என்றாலும் விமர்சன ரீதியாக படத்தில் பல நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. ஒரு கட்டத்தில் அட்லீ மற்ற படங்களை காப்பி அடித்து மட்டுமே தமிழ் இயக்குவதாக விமர்சிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் ஷாருக்கான இயக்க வாய்ப்பு கிடைத்தது. நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் என சூப்பர் ஹிட் பட்டாளங்களை வைத்து படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார். பல ஆண்டுகள் கழித்து ஷாருக்கான் நடிப்பில் ஆயிரம் கோடியை இப்படம் வசூல் செய்திருந்தது.
இருந்தும் விமர்சன ரீதியாக தமிழ் ரசிகர்களின் இந்த படத்தை பல தமிழ் படங்களின் காப்பி என கலாய்த்தாலும் வட இந்தியர்கள் திரைப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதனால் தற்போது அட்லீயின் மார்க்கெட் உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில் இவருடைய ஆறாவது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக இருக்கும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று படமாக உருவாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இப்படத்திற்கு அட்லீக்கு மட்டுமே 100 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். பெரிய பட்ஜெட் என்பதால் நடிகைகள் குறித்து தேர்வும் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் தமிழ் நடிகைகள் யாரும் பேச்சுவார்த்தையில் கூட இடம் பெறவில்லையாம்.
மூன்று நடிகைகள் நடிக்கும் இப்படத்தில் தற்போது வரை மிருணாள் தாக்கூரை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இன்னொரு பக்கம் ஜான்வி கபூர், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது.