Vijayakanth: பொதுவாக ஏவிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு திரைப்படத்தை துவங்குவதற்கு முன் நன்றாக திட்டமிட்டு வேளையில் இறங்குவார்கள். எல்லாம் சரியாக அமைந்தால் பட்டுமே படத்தை தயாரிக்க வருவார்கள். குறிப்பாக படத்தின் பட்ஜெட் மற்றும் ஹிரோ இவர்தான் என்பதில் அவர்கள் எந்த காம்பரமைஸும் செய்து கொள்ளமாட்டார்கள்.
அதேபோல், தயாரிப்பு செலவையும் பார்த்து பார்த்து செய்வார்கள். 50 பேருக்கு சாப்பாடு எனில் 50 பேருக்கு மட்டும்தான் சாப்பாடு வரும். 5 பேர் சேர்த்து வந்துவிட்டால் சாப்பாடு இருக்காது. இப்படி எல்லா விஷயத்திலும் கறாராக இருந்ததால்தான் பல பெரிய இயக்குனர்களும், நடிகர்களும் அவர்கள் பக்கம் செல்வதில்லை.
இதையும் படிங்க: மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…
இந்த காரணத்தால்தான் கடந்த பல வருடங்களாக ஏவிஎம் நிறுவனம் படங்களே தயாரிப்பதில்லை. 50,60களில் இந்த நிறுவனம் பீக்கில் இருந்த போதும் எம்.ஜி.ஆர் கூட ஒரே ஒரு படம்தான் இவர்களின் தயாரிப்பில் நடித்தார். படத்தின் முடிவில் அவருக்கும், அந்த நிறுவனத்திற்கும் சில உரசல்களும் வந்தது.
80களில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தரராஜன். இவர் இயக்கிய ‘நான் பாடும் பாடல்’ படம் ஹிட் அடிக்கவே சுந்தர் ராஜனை தேடி பல தயாரிப்பாளர்கள் வந்தனர். அப்போது, எனக்கு சொந்த வீடு வாங்கி கொடுக்கும் தயாரிப்பாளருக்கு மட்டுமே நான் படம் இயக்குவேன் என அவர் சொல்ல ஏவிஎம் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது. மேலும், 2 லட்சம் அட்வான்ஸும் கொடுத்துவிட்டனர்.
இதையும் படிங்க: குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..
அந்த பணத்தை வீடு வாங்குவதற்கு அட்வான்ஸாக சுந்தர்ராஜன் கொடுத்துவிட்டார். வைதேகி காத்திருந்தாள் கதையையும் உருவாக்கினார். யார் ஹீரோ? என ஏவிஎம் கேட்க, சுந்தர்ராஜன் சொன்ன பெயர் விஜயகாந்த். ஆனால், ஏவிஎம் நிறுவனத்திற்கு இதில் உடன்பாடு இல்லை. ‘விஜயகாந்த் வேண்டாம்.. சிவக்குமாரை போடுங்க’ என சொல்ல, சுந்தர்ராஜனோ விஜயகாந்த் மட்டுமே இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார்’ என சொல்லிவிட்டார்.

அதில் உடன்பாடு இல்லாத ஏவிஎம் ‘எங்களுக்கு இதில் விருப்பமில்லை. வாங்கிய 2 லட்சத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள்’ என சொல்லிவிட சுந்தர்ராஜன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் தூயவன் என்கிற பத்திரிக்கையாளர் மூலம் பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்து பேச, அவருக்கு கதை பிடித்துப்போய் உடனே 2 லட்சத்தை சுந்தர்ராஜனிடம் கொடுக்க அந்த பணத்தை ஏவிஎம் நிறுவனத்திடம் சுந்தர்ராஜன் திருப்பி கொடுத்துவிட்டார். தூயவன் தயாரிப்பில் வெளியான வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அழ ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!.. புத்தாண்டுக்கு ஒரு அப்டேட் கூட இல்லையே.. ரொம்ப பாவம்ப்பா!..




