More
Categories: latest news television

பாக்கியலட்சுமி: செழியனை ப்ளாக்மெயில் செய்து தன் கைப்பிடியில் வைத்த மாலினி…! கோபிக்கு வந்த பெரிய ஆப்பு!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோடில் செழியனிடம் பேசிக்கொண்டிருந்த மாலினி குழந்தை பிறந்த விஷயம் கேட்டு அதிர்ச்சியாகி விடுகிறார். உடனே மாலினி உங்களை உடனே பார்க்கணும் எனக் கேட்கிறார். இதனால் கடுப்பான செழியன், என்ன பேசிட்டு இருக்க நீ? என்னால இப்ப வர முடியாது என்கிறார்.

மாலினி பேசிக்கொண்டே இருக்க செழியன் போனை கட் செய்துவிடுகிறார். இதனால் எமோஷனலான மாலினி நீங்க உடனே என்னை பார்க்க வரணும். இல்லைனா நான் கையை அறுத்துப்பேன் என ப்ளாக்மெயில் செய்து வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: அந்த இடத்தில் டாட்டூ குத்திய அனன்யா!.. காட்ட சொல்லி வற்புறுத்திய விசித்ரா.. இதெல்லாம் ரொம்பு தப்பு!..

இதனால் அதிர்ச்சியான செழியன் ஆபிஸில் வேலை இருக்கு. உடனே போகணும் எனக் கூறிவிட்டு மாலினியை காண செல்கிறார். அவர் அழுதுக்கொண்டே இருக்க என்ன மாலினி இப்டி பண்ணுற? உங்களுக்கு குழந்தை பிறந்துட்டு, இனிமே என்னை பார்க்க வரமாட்டீங்களா? நீங்க இல்லனா நான் எப்டி இருப்பேன் என அழுது வடிகிறார்.

இதனால் மனம் மாறிய செழியன் பொறுத்து பேசுகிறார். இதற்கிடையில் பாக்கியா செழியனுக்கு கால் செய்து கொண்டே இருக்க கட் செய்து விடுகிறார். உடனே போகணுமா என மாலினி இழுக்க அப்போ போகணும் தானே என்கிறார். இன்னைக்கு ஒருநாள் என்கூட தங்குங்க என்கிறார் மாலினி.

இதனால் செழியனும் மாலினியுடன் தங்கிவிடுகிறார். பின்னர் விடிந்து கிளம்பும்போது உங்க மனைவி, குழந்தையை பார்த்து விட்டு இங்கையே வந்துடுங்க என்கிறார். என்ன இப்டி சொல்ற எனக் கேட்கிறார். இல்ல நீங்க வருவீங்க? கண்டிப்பா வரணும் என அதிர்ச்சியுடன் செழியன் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

எழில் பாக்கியா வீட்டில் அமர்ந்து போன் நோண்டிக்கொண்டு இருக்கும் பேக்கிங்கில் இருந்து சிலர் வந்து கோபி குறித்து விசாரிக்கின்றனர். எழில் அப்படி யாரும் இல்லை என கூறுகிறார். அதன் பின்னரே அவர் நாலு மாசமா கிரெடிட் கார்ட் பில் கட்டலை என்கின்றனர்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ரவியை கத்திவிட்டு செல்லும் ஸ்ருதி… விஜயாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் ரோகிணி…

பின்னர் ஒரு ஐடியாவுக்கு வரும் எழில் அவர் வீட்டு முகவரியை கொடுத்து அனுப்புகின்றனர். இதை தொடர்ந்து கோபி வீட்டுக்கு வரும் பேங்க் ஆட்கள் கிரெடிட்டில் இருந்து வருவதாக கூறுகின்றனர். உடனே வெளியில் அழைத்துவந்து கட்டிவிடுகிறேன். இனி வீட்டுக்கு வரவேணாம் எனக் கூறி அனுப்பி விடுகிறார்.

பின்னர் வீட்டுக்குள் வரும் கோபியிடம் யார் அவர்கள் ஏன் தனியே அழைத்து போய் பேசினீங்க என ராதிகா விசாரிக்கிறார். அவர்கள் ஆபருக்காக என்னை தேடி வந்தாங்க. நாலு கார்டு கேட்டாங்க வேணாம் என அனுப்பி விட்டதாக கூறுகிறார்.இத்தனை கேள்வி கேட்குறீயே ஆஸ்பிட்டல் போறாரானு கேட்க வேண்டி தானே என ராதிகா அம்மா கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Published by
Akhilan

Recent Posts