Connect with us

Cinema News

ராதிகா மீது பயங்கர சந்தேகத்தில் இருக்கும் குடும்பம்… உளறி கொட்டிய கோபி…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோடில் கிச்சனில் இருக்கும் ராதிகாவுக்கு தாளிப்பு வாசனை பொறுக்காமல் வாந்தி எடுத்து விடுகிறார். செல்வி இந்த அம்மா கர்ப்பமாவா இருக்காங்க. இதுக்கெல்லாம் வாந்தி வருது எனக் கலாய்க்கிறார். சரியாச்சுனு சொன்னீங்களே என அமிர்தா கேட்கிறார்.

அப்படித்தான் இருந்துச்சு என ராதிகா சொல்கிறார். பின்னர் ஈஸ்வரி யார் வாந்தி எடுத்தா எனக் கேட்டுக்கொண்டே வர அமிர்தா, ராதிகாவை கை காட்டுகிறார். செழியன் குழந்தையை கொஞ்சிக்கொண்டு இருக்க பெயர் வைக்கும் விஷயம் குறித்து பேசுகிறார் ஜெனி. அதையடுத்து செழியன் சில பேர்களை சொல்ல ஜெனி அதெல்லாம் வேண்டாம் எனக் கூறுகிறார்.

இதையும் படிங்க: உச்சத்தில் வர வேண்டிய நடிகை… விபச்சார வழக்கால் தொலைந்த வாழ்க்கை…

ஜெனி நான் ஒரு பெயரை சொல்றேன் என மாலினி பேரை சொல்கிறார். இதனால் செழியன் கடுப்பாகிறார். ஈஸ்வரி அப்போ ராதிகாவுக்கு கசாயம் வைத்து கொடுக்க பாக்கியாவிடம் சொல்கிறார். நான் வேலையா இருக்கேன் என்கிறார் பாக்கியா. ஒரு சின்ன வேலை தானே என்று ஈஸ்வரி கூற சின்னதோ, பெரிசோ யாருக்கு செய்றோம்கிறது தான் முக்கியம் என்கிறார்.

இதனால் ஈஸ்வரியே கிச்சனுக்கு சென்று தண்ணீர் வைத்து ஓமம் எங்க, சீரகம் எங்க என கேள்வி கேட்கிறார். இதில் கடுப்பான பாக்கியா இந்த கபோர்ட்ல தான் எல்லாம் இருக்கு. அப்படி இல்லைனா வீட்லையே இல்லனு அர்த்தம். அப்போ உங்க பையன அனுப்பி வாங்கிட்டு வர சொல்லி கசாயம் போடுங்க என வெளியேறுகிறார். பின்னர் ஈஸ்வரி கசாயம் போட்டு எடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: என் படத்தை பாக்க மாட்டேனு சொல்லிட்டாரு! ரஜினி பற்றி பகத்பாசில் சொன்ன சீக்ரெட்

கோபி இதெல்லாம் வேண்டாம் அம்மா. ராதிகா பேபிக்கு ஒத்துக்காது என்கிறார். இதில் ஷாக்கான ஈஸ்வரி, என்ன பேபியா எனக் கேட்க இல்ல ராதிகாவை செல்லமாக சொன்னேன் என சமாளிக்கிறர். மாத்திரை போட்டு இருக்கா, கொஞ்ச நேரம் கழிச்சு நானே கொடுக்கிறேன் என வாங்கி செல்கிறார். ராதிகா எதுக்கு வேணானு சொன்னீங்க எனக் கேட்கிறார்.

டாக்டர் தானே கொடுக்கிற மாத்திரையை தவிர வேற எதுவும் சாப்பிட கூடாதுனு சொன்னாங்க என நினைவுபடுத்துகிறார். அடுத்ததாக ஜெனியின் பிள்ளைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். பின்னர் ஈஸ்வரியிடம் பெயர் தேர்வு செய்யும் வேலையை தருகின்றனர். பழனிசாமி சாமி வீட்டில் பேசிக்கொண்டு இருக்க அப்போ அங்கு பாக்கியா வருகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: நான் ஹீரோயினை விட அழகா இருக்கேன்னு என்ன பண்ணாங்க தெரியுமா? வேதனையில் நடிகை

google news
Continue Reading

More in Cinema News

To Top