Connect with us

Cinema News

ஒரு பக்கம் கல்யாணம்… இன்னொரு பக்கம் கர்ப்பம்… கடுப்பாகி போன பாக்கியலட்சுமி ரசிகர்கள்!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகா தன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி வீட்டுக்கு வருகிறார். ராதிகா அம்மா, வாழ்த்துக்கள் சொல்லுகிறார். இந்த குழந்தையை பெத்துக்கங்க. அதான் நல்லது என்று சொல்கிறார். உங்களோட பிள்ளைங்க யாரும் உங்களுக்கு சப்போர்ட்டா இருக்கலை. எல்லாரும் அந்த பாக்கியாவுக்கு தான் சப்போர்ட்டா இருக்காங்க.

உங்களுக்கும், ராதிகாவுக்கும் ஒரு குழந்தை இருந்தா? உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தா ஓடி வந்து நிற்கும். உங்க அம்மாகிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டீங்களா என்று கேட்கிறார். அதற்கு, கோபி இல்லை, கூடிய சீக்கிரம் சொல்லிடுவேன் என்று சொல்லுகிறார். ஏதாவது பிரச்சனைன்னா என்னிடம் சொல்லுங்க வந்து பேசிக்கிறேன் என்று கூறுகிறார். பின்னர் கோபி மற்றும் ராதிகா வீட்டுக்கு வருகின்றனர்.

இதையும் படிங்க: கில்லி எஃபெக்ட்!.. திரிஷாவை பார்க்க கேரவனை முற்றுகையிட்ட ரசிகர்கள்.. எந்த இடம்.. என்ன படம் தெரியுமா?

ராதிகாவை பக்குவமாக அழைத்து வர அவளை ஏன் இப்படி அழைச்சிட்டு வர என ஈஸ்வரி கேட்கிறார். ராதிகா இப்ப பரவால்ல என்று சொல்கிறார். பிறகு, ஜெனி வாமிட் நின்னுச்சா என்று கேட்க கோபி அது சீக்கிரம் நிக்காது. திடீர்னு வரும் என தொடர்ந்து உளறுகிறார். நீ என்னடா எதையோ உளறிட்டே இருக்க என்று ஈஸ்வரி கேட்கிறார்.

இதனால் ஜெர்க்கான கோபி, ராதிகாவுக்கு உடம்பு சரியாமல் போனதால் இப்படி ஆகிவிட்டது என்று சமாளிக்கிறார்.  அதன் பிறகு ராதிகாவை கோபி மாடிக்கு அழைத்து சென்றுவிடுகிறார். பாக்கியாவிடம் ஈஸ்வரி, நீ அவனை கவனிச்சியா என்று கேட்க நான் எதுக்கு அத்தை உங்க பிள்ளையை கவனிக்கணும் என்று பதிலடி தருகிறார்.

இதையும் படிங்க: தனியா ஓடுற குதிரை இல்லை விஜய்!.. 3 குதிரை ஓடினாலும் தனியா தெரியுற குதிரை!.. இயக்குநர் பாராட்டு!

பாக்கியா ரெஸ்டாரன்ட் முதல் வாரம் லாபம் இல்லை. இப்போ ஓரளவுக்கு நல்ல லாபம் வந்திருக்கு என்று சொல்கிறார். ஜெனி வாழ்த்துகிறார். எழில் மற்றும் அமிர்தா உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்க பாட்டி பேசவில்லை எனக் கூறி அமிர்தா கவலை கொள்கிறார். எழில் எனக்கு சில ஆசைகள் இருக்கே, அது முடிந்த பிறகு குழந்தை பெத்துக்கலாம்.

நம்ம வீட்டில் உன் கூட பேச நிறைய பேர் இருக்காங்க. பேசாதவங்களை நினைத்து கவலை கொள்ளாதே எனச் சொல்கிறார். இதையடுத்து, பழனிச்சாமி விதவிதமான சட்டைகளில் போட்டோ எடுத்து அதை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டு இருக்கிறார். இதை இனியா பார்த்து பாக்கியாவிடம் சொல்ல அவரும் பார்த்து ஆச்சரியப்படுவதுடன்  இன்றைய எபிசோட் முடிவடைந்தது‌. 

google news
Continue Reading

More in Cinema News

To Top