More
Read more!
Categories: Cinema News latest news television

கோபியை மிரட்டிவிட்ட பாக்கியா… சைட் கேப்பில் லவ்சா… முடியலையப்பா!… எங்கள விட்ருங்க…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமி டீ சர்ட் போட்டுக்கொண்டு கீழே வந்து நிற்க அவர் அம்மா யார் தம்பி நீ என கேட்கிறார். அம்மா நான் தான் என பழனிச்சாமி சொல்ல பார்க்க அழகா இருக்குப்பா என பாராட்டுகிறார். பின்னர் உங்க அப்பா கனவில் வந்து உனக்கு கல்யாணம் சீக்கிரம் ஆகும் என கூறியதாகவும் தெரிவிக்கிறார்.

அதன்பின் பழனிச்சாமி பாக்கியாவை பார்க்க ரெஸ்டாரண்டுக்கு கிளம்பி செல்கிறார். அங்கு ஆர்டர் கொடுத்தவர்  நேரமாவதால் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் அங்கு வரும் பாக்கியா அவருக்கு ஆர்டரில் இருந்து 50% தள்ளுபடியும் ஒரு கூல்ட்ரிங்க்ஸ்யும் கொடுத்து சமாதானம் செய்கிறார்.

இதையும் படிங்க: நடிகரின் கெட்டப்பழக்கத்தால் படாத பாடுபட்ட ஸ்ரீதேவி!.. மனுசன் ரொம்ப டெராரா இருப்பார் போல!..

ரெஸ்டாரண்டுக்கு வரும் பழனிச்சாமியின் டிரசை பார்க்கும் அமிர்தா மற்றும் செல்வி இருவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். பின்னர் உள்ளே சென்று பாக்யா எதுவும் சொல்வாரா என பழனிச்சாமி பார்க்க ஆனால் அவரோ நீங்க கொடுத்த புக்கை வச்சி இன்னைக்கு ஒரு கஸ்டமரிடம் ஏற்பட்ட பிரச்சனையை சமாளிச்சிட்டேன் என சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இது சரிப்பட்டு வராது என கிளம்பிச் செல்லும் பழனிசாமியை ஒரு நிமிஷம் என அழைக்கிறார் பாக்கியா. அவர் ஆசையாக திரும்பிப் பார்க்க அம்மா நாட்டுக்கோழி குழம்பு வச்சு தர கேட்டாங்க அடுத்த வாரம் செஞ்சு தருவதாக சொல்லி அனுப்புகிறார். இதனால் முகம் வாடி கிளம்பி விடுகிறார் பழனிசாமி. அதன் பிறகு ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண் தன்னுடைய தங்கை கர்ப்பம் எனக் கூறி லீவ் கேட்கிறார். அப்பொழுது பாக்கியாவிற்கு ராதிகாவின் கர்ப்பம் ஞாபகம் வருகிறது.

இதையும் படிங்க:கியாரா அத்வானி எல்லாம் கால் தூசுக்கு வருமா!.. இந்த வயசுலயே இப்படி ஜொள்ளு விட வைக்கிறாரே ஸ்ரீதேவி!..

இந்த நேரத்தில் அங்கு வரும் செல்வி பழனிச்சாமி அண்ணனின் ட்ரெஸ் குறித்து கேள்வி கேட்கிறார். அதில் கடுப்பாகும் பாக்கியா யார் எந்த நிலைமையில் இருக்காங்கன்னு தெரியாம நீ வேற எதையாவது பேசாத என்கிறார். இதை தொடர்ந்து செல்வியிடம் அமிர்தா பழனிசாமி சாரை அம்மா பிரண்டா தான் பார்க்கிறாங்க என்கிறார்.

வீட்டிற்கு வரும் கோபி தன்னுடைய க்ளவுட்கலாவுக்கு கிச்சன் பிசினஸ் குறித்து ரொம்ப பெருமையாக பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு நிற்கும் பாக்கியா அவரை மட்டமாக பார்க்கிறார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டுவதுடன் அங்கிருது ஓடிவிடுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Published by
Akhilan

Recent Posts