வசமா மாட்டிக்கொண்ட பாக்கியலட்சுமி இயக்குனர்… என்னத்தை சொல்றாருனு தான் பார்ப்போமே!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் பேசிக்கொண்டு இருக்க சரியாக அமிர்தா அம்மா அங்கு வருகிறார். கணேஷ் வந்தானா அமிர்தாவை காணும் எனக் கூறி பதறுகிறார். உடனே பாக்கியா, அமிர்தாவும், எழிலும் கோயில் போயிருக்காங்க. கணேஷ் இன்னும் வரலை என்பதை கூறுகிறார்.

அந்த நேரத்தில் கோயில் போனவர்கள் வீட்டுக்கு வருகின்றனர். அமிர்தாவை பார்த்த அவர் அம்மா கட்டிகொண்டு அழுகிறார். எழில் தன் அம்மாவிடம் கணேஷை நேரில் பார்த்ததாக கூறி அதிர்ச்சி கொடுக்கிறார். அந்த நேரத்தில் கணேஷ் தன் பெற்றோருடன் வீட்டுக்கு வந்து விடுகின்றனர்.

இதையும் படிங்க: வாழ்ந்தவர் கோடி.. என்றும் மனதில் இருப்பார் விஜயகாந்த்!.. கண்கலங்கி அஞ்சலி செலுத்திய ரஜினி…

அவர்களை பார்த்து கடுப்பான அமிர்தாவின் அம்மா உன்கிட்ட எத்தனை தடவை கெஞ்சினேன். என் பொண்ணு இப்போ தான் குடும்பமா வாழ்றா. நீ செத்து போன அழணும். உயிரோட வந்தா உன்கூட வந்துடனுமா எனக் கேட்கிறார். இதில் கடுப்பாகும் கணேஷின் அம்மா என் பிள்ளை சாவுனு சொல்லாதீங்க என்கிறார்.

உடனே எழிலிடம் சொல்லும் அவர் கணேஷ் நிலைமை புரிந்துக்கோ அவன் பிள்ளையோட இருக்க ஆசைப்படுறான் என்கிறார். அமிர்தா அம்மாவும் எழில் கையை பிடிச்சிக்கிட்டு அவளை அனுப்பிடாதீங்க எனக் கெஞ்சுகிறார். இதில் நிலாவை அழைக்க அந்த குழந்தை ராமமூர்த்தியிடம் சென்று தஞ்சம் அடைந்து விடுகிறது.

பிறகு கணேஷ் இப்ப எதுக்கு தேவையில்லாம எல்லோரும் பேசுறீங்க. அமிர்தா வா வீட்டுக்கு போகலாம் என அவர் அருகில் செல்கிறார். ஆனால் அமிர்தா பயந்து எழில் பின்னாள் மறைந்து கொள்கிறார். இதனால் எழிலும் அவருக்கு அணைப்பு கொடுக்க கணேஷ் கடுப்பாகி விடுகிறார்.

இதையும் படிங்க: அந்தப் படத்திற்காக வழிவிடும் தனுஷ்! அப்போ பொங்கல் ரிலீஸ் இல்லையா? கேப்டன் மில்லரின் நிலைமை?

என் பொண்டாட்டி மீது இருந்து கையெடு எனக் கத்த செழியன் என் தம்பி அவனோட பொண்டாட்டி கைய அவன் புடிச்சி இருக்கான். அதை நீ யாரு கேட்க என்று கணேசை திட்டுகிறார். இதை பார்த்த ஈஸ்வரி என் பேரன் வாழ்க்கை போச்சே. இதுக்கா கஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்சான் என சொல்லி கண்ணீர் வடிக்கிறார்.

உடனே அமிர்தா எனக்கு எதுவுமே தெரியாது. இது மாதிரி நடக்கும்னு தெரியாது. என்னை மன்னிச்சிடுங்க எனக் கவலையாக பேசுகிறார். இதை பார்த்த கணேஷ் நான் பார்த்துக்குறேன் அமிர்தா உன்னை எனக் கூறி வா வீட்டுக்கு என அழைக்க அமிர்தா மறுப்பதுடன் இன்றைய இன்றைய எபிசோடு முடிந்துள்ளது. இதில் அமிர்தாவை யார் பக்கம் அனுப்பினாலும் இயக்குனர் மாட்டிக்க தான் போறார். கணேஷா? எழிலா பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Related Articles

Next Story