Connect with us

latest news

ஹப்பாடி ஒருவழியா சங்கமத்துக்கு புல் ஸ்டாப் வைக்கப்போறாங்கடா அப்பா!… ஓடியாங்க ஓடியாங்க

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீயை திட்டிக்கொண்டு இருக்கிறார்  கோமதி. இதை பார்த்த பாக்கியா எதுவா இருந்தாலும் ரூமில் போய் பேசிக்கொள்ளலாம் என அழைத்து செல்கிறார். அங்கு போய் அண்ணன் தூக்கு மாட்டிய விஷயத்தினை கூற ராஜீ அதிர்ந்து விடுகிறார்.

பின்னர் ராஜீ ஒரு பையனோட வந்த விஷயத்தினை சொல்ல வேண்டாம். கல்யாணம் பிடிக்கலை எனச் சொல்லலாம் என பாக்கியா கூற இவ அந்த பையனோட அங்க இங்க நின்னு பேசுனது. அவனோட ஊரை விட்டு வந்தது என எல்லாத்தையும் ஊர் மக்கள் பேசி இருக்காங்க. இப்போ ஒன்னுனா ரெண்டுனு பேசுவாங்க என்கிறார் கோமதி.

இதையும் படிங்க: நாலா பக்கமும் ரோகினியை சுற்றி வளைத்த பிரச்னை… இப்பையாது மாட்டி விடுங்களேன்பா!

ஓடிப்போன எல்லா முடிஞ்சது வந்துட்டதா பேசுவாங்க எனக் கூற ராஜீ அழுதுக்கொண்டே ரூமுக்கு செல்கிறார். அமிர்தா பிடித்து கேட்க நான் அவனை நம்பி வந்து ஒரு ரூமில் தங்கினேன். மத்த எந்த தப்பும் நடக்கலை. எனக்கு அவமானமா இருக்கு. நான் சாகுறதான் சரி எனக் கூறிவிட்டு ரூமை அடைத்து கொள்கிறார்.  

அமிர்தா பயந்து கதவை தட்ட எல்லாரும் வந்துவிடுகின்றனர். பின்னர் எழில் பதறி கதவைஉடைத்து பார்க்க கையை கிழித்து கொள்ள நிற்கும் ராஜீயை தடுத்து விடுகின்றனர்.  இதை பார்த்த கோமதியிடம் அவன் நகையை எடுத்துட்டு வந்தது எனக்கு தெரியாது அத்தை என அழுகிறார். 

பின்னர் முடிவெடுக்கும் கோமதி பாக்கியாவை அழைத்து சென்று எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்கிறார். பாக்கியாவும் அதற்கு சம்மதம் சொல்லிவிடுகிறார். இதற்கிடையில் எழில் பாவம் அந்த பொண்ணு யாருமே அந்த பொண்ணுக்கிட்ட அந்த பையனை பத்தி சொல்லலையா எனக் கேட்க ஏன் நானே சொன்னேன். அவ தான் கேட்கலை என்கிறார் கதிர்.

இதையும் படிங்க: வரீங்களா? இல்லையா? விஷால் செய்வது மட்டுமல்ல சொல்றதை கூட குழப்பிவிடுறாரே?

பின்னர் பெரியவங்க இருக்காங்க அவங்களே முடிவெடுக்கட்டும் என்கிறார். மீனாவையும், கதிரையும் தனியாக அவர்கள் தங்கி இருந்த ரூமுக்கு அழைச்சிக்கிட்டு போய் அண்ணன்கள் தான் வெளியில் போனதால் பட்ட கஷ்டத்தினை கூறுகிறார். அவங்க பாசம் இல்லாமல் இருப்பதை சொல்லி அழுகிறார் கோமதி. நீ அம்மா கேட்டா எதுவும் செய்வீயா எனக் கேட்க கதிரும் செய்வதாக கூறிவிடுகிறார். அப்போ நீ ராஜீயை கல்யாணம் செஞ்சிக்கணும் எனக் கேட்கிறார் கோமதி. இதை கேட்ட மீனா மற்றும் கதிர் அதிர்ச்சியாக நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top