Connect with us

Cinema News

பாக்கியாவை வச்சி வாங்கும் ஈஸ்வரி…உங்களுக்கு தேவை தான்.. வம்பை இழுத்துவிட்டுக்கிறதே வேலையா போச்சு…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கணேஷ் சென்ற காரை பின் தொடர்ந்து செல்கிறார் பாக்கியா. ஆனால் ஒரு கட்டத்தில் ஆட்டோ காரை மிஸ் செய்துவிடுகிறது. இதனால் என்ன செய்வது எனத் தெரியாத பாக்கியா எழிலுக்கு கால் செய்து கணேஷ் செய்த பித்தலாட்டங்களை சொல்கிறார். அதிர்ச்சியாகும் எழில் அங்கையே இருங்க நான் வரேன் என அங்கு வருகிறார்.

கணேஷ் அப்பா, அம்மாவிடம் அவன் எங்கு போனான் எனக் கேட்க தெரியாது என்கின்றனர். பின்னர் எதுவும் கால் வந்தா எங்களிடம் சொல்லுங்க எனக் கூறி செல்கின்றனர். பாக்கியா மட்டும் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் இருப்பவர்களிடம் அமிர்தா காணாமல் போன விஷயத்தை கூறும்போது ஈஸ்வரி ரொம்பவே கோபப்படுகிறார்.  அவரும் கோபியும் இணைந்து பாக்கியாவை திட்டிக் கொண்டே இருக்கின்றனர்.

இதையும் படிங்க: அத மட்டும் நான் எப்பவுமே செய்ய மாட்டேன்!.. சிவகார்த்திகேயனுக்கு வாக்கு கொடுத்த விஜய்!..

இந்த குடும்பத்தோட நிம்மதியை அழிக்க வந்திருக்க. இனி நீ வாயே திறக்ககூடாது என்கிறார். பிறகு செழியனிடம் எழிலை போன் பண்ணி உடனே வீட்டுக்கு வர சொல்லு அந்த அமிர்தா எங்க வேணா போகட்டும் அதை பற்றி கவலை இல்லை என்று சொல்கிறார். அரவம் தெரியாமல் மறைத்து வைத்திருக்கும் இடத்தில் அமிர்தாவும், நிலாவும் அழுதுக்கொண்டு இருக்கின்றனர். கணேஷ் என்ன அமிர்தா அழுற எனக் கோபப்படுகிறார்.

நான் வேற வாழ்க்கைக்குள்ள போயிட்டேன் என்ன விட்ரு என கெஞ்ச அதெல்லாம் முடியாது என்கிறார் கணேஷ். இனி நம்ம தான் ஒரே குடும்பமா வாழ போறோம் எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: உள்ளூர்ல வேணுனா அம்பானியா இருக்கலாம்! வெளியூர்ல.. ரஜினியை வம்புக்கிழுத்த பார்த்திபன்

google news
Continue Reading

More in Cinema News

To Top