Connect with us

latest news

ஜவ்வா இழுக்கிறதுனா இதானா? எப்பங்க இந்த டைவர்ஸ் கேஸ முடிப்பீங்க!… புலம்பும் ரசிகர்கள்

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் செழியனும், பாக்கியாவும் காத்து இருக்கின்றனர். அப்போது எழில் அங்கு வர நீ ஏன்டா வந்த என்கிறார் பாக்கியா. செழியனுக்கு சப்போர்ட்டா தான் என எழில் கூறிவிடுகிறார். அப்போது ஜோசப்பும், ஜெனியும் அங்கு வருகின்றனர்.

ஜோசப் உள்ளே கூப்பிட்டு போக பார்க்க எழில் ஜெனியிடம் பேசுகிறார். இதனால் கடுப்பாகும் ஜோசப் நலம் விசாரிக்க ஆரம்பிப்ப அப்புறம் உங்க அண்ணனுக்கு சப்போர்ட் செய்வ என்கிறார். இதனால் கடுப்பாகும் எழில், ஜெனி என்னோட ஸ்கூல் சீனியர் அந்த முறையில் தான் பேசுனேன் என பதிலடி கொடுக்கிறார். பின்னர் வழக்கு விசாரணைக்கு வர ஜெனி வக்கீல் செழியன் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி தான் இருப்பார்! ரகசியம் சொன்ன பிரபல நடிகர்…

ஆனால் ஜெனிக்கே இது அதிர்ச்சியை கொடுக்கிறது. ஒரு கட்டத்தில் செழியன் என்ன பதில் சொல்கிறார் என நீதிபதி கேட்க எனக்கு ஜெனி மேல காதல் உண்டு அதை தவிர மற்ற குற்றத்தை ஒப்புக்கிறேன் என அழுகிறார். நீதிபதி அப்போ ஏன் இன்னொரு பொண்ணுக்கூட தப்பு செஞ்ச எனக் கேட்க புத்திக்கெட்டு பண்ணிட்டேன் என கண்ணீர் வடிக்கிறார். ஜெனி மீது குத்தம் இருக்கா எனக் கேட்க அவர் மீது எந்த தப்பும் இல்லை என்கிறார்.

பின்னர் இருவருக்கும் கவுன்சிலிங் என நீதிபதி கூறிவிடுகிறார். எல்லாரும் வெளியில் வர ஜெனியை காரில் விட்டு லாயரை காண செல்கிறார் ஜோசப். அந்த நேரத்தில் ஜூஸ் குடிக்க வேண்டும் என பொய் சொல்லி செழியனை அழைத்து போகும் எழில். ஜெனியோட போய் பேசு என்கிறார். செழியன் அவங்க அப்பா வந்துடுவாரு எனக் கூற அப்போ காரை எடுத்துட்டு போ என ஐடியா கொடுக்கிறார்.

இதையும் படிங்க: எலி தானா சிக்கப்போகுது!… சொன்ன கதையை உண்மையாக்க நினைத்து சிக்க போகிறாரா ரோகினி?

google news
Continue Reading

More in latest news

To Top