Connect with us

latest news

நீங்க பண்றது கிரிஞ்சுனு புரியுதா? ஜவ்வா இழுக்குறீங்களே… பாக்கியலட்சுமிக்கு வந்த சோதனை

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீ வீட்டில் முத்துவேலுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் கோபி. பின்னர் டான்ஸ் ஆடச் சொல்ல இனியா ஆட தொடங்கிவிடுகிறார். பின்னர் குடும்பத்தில் இருந்த மொத்த பேரையும் கூட்டி வந்து ஆடிக்கொண்டு இருக்கின்றனர்.

அப்போ ராஜீக்கு கால் வர அவர் தனியாக போகிறார். ஆனால் அவர் முகம் சரியில்லாமல் இருப்பதை பார்த்த ராதிகா அவரிடம் விசாரிக்க கால் வந்துச்சு பேசிட்டு வந்துடுவேன் எனப் போய் விடுகிறார். கண்ணன் வெளியில் வா எனக் கூப்பிட யாரும் தூங்கலை? இப்போ வர முடியாது என்கிறார்.  சந்தோஷமா இருக்க குடும்பத்தை கஷ்டப்படுத்திட்டு உன்கூட தான் வரப்போறேன். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு என்கிறார். அடுத்து ஈஸ்வரிக்கு கால் வருகிறது.

இதையும் படிங்க: ‘மாநாடு’ பிடிக்கலைனுட்டாங்க.. ஹீரோ ரெடியா இருக்கனும்! பார்ட் 2 பற்றி தயாரிப்பாளர் சொன்னதை கேளுங்க

ஜெனிக்கும், செழியனுக்கும் பிராப்ளமாமே என அவரை குடைய கடுப்பாகி திட்டி போனை வைத்து விடுகிறார். அங்கு வரும் செழியனிடம் உடனே டிரெஸை எடுத்துக்கிட்டு கிளம்பு குலதெய்வம் கோயில் போகலாம் என்கிறார். அவர் எல்லாரும் வந்ததும் போகலாமே எனக் கூறிவிடுகிறார். அப்போ நானே தனியா போய்கிறேன் எனக் கடுப்படிக்க செழியனும் போய் கிளம்பி வருகிறார்.

ராமமூர்த்தி அவர்கள் கிளம்பும் நேரத்தில் சரியாக வந்துவிட நானும் வரேன் என்கிறார். இல்ல நீங்க வீட்டை பாத்துக்கோங்க. நானும் செழியனும் சென்று வருவதாக கூறிவிட்டு கிளம்புகிறார். காரில் பாதி தூரம் போனதும் ஜெனி வீட்டுக்கு போக சொல்கிறார். செழியன் பதற உனக்கு பாட்டி மேல நம்பிக்கை இருந்தா திருப்பு இல்ல என்னை இறக்கி விடு என்கிறார். செழியனும் ஜெனி வீட்டுக்கு காரை திருப்புகிறார். ஜெனி வீட்டில் ஞானஸ்தானத்துக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது.

ஜெனி உறவினர்கள் இருக்க குழந்தைக்கு ரேச்சல் என பெயர் வைக்கப்போவதாக ஜோசப் சொல்கிறார். பின்னர் நானும், மரியமும் சர்ச் சென்று பார்த்துவிட்டு வருவதாக சொல்கிறார். ஜெனி தானும் வருவதாக கூற சரி என அழைத்து போகின்றனர். குழந்தையை உறவினர்கள் பார்த்து கொள்வதாக சொல்லிவிட குழந்தையை விட்டு ஜெனி கிளம்பிவிடுகிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி அங்கு வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு கிளம்ப உறவினர்கள் தடுக்கின்றனர். எந்த பேப்டிசமும் நடக்காது.

இதையும் படிங்க: இதுக்கு பேரு புரமோஷனா?!.. பச்சோந்தி வேஷம் போடாதீங்க!.. சந்தானத்தை பொளக்கும் பிரபலம்..

பின்னர் ராமமூர்த்திக்கு போன் செய்து விசாரிக்கிறார். சாப்பாடு நல்லா இருந்ததாக பாராட்டு வந்த தகவலையும் கூறுகிறார். ஈஸ்வரி, செழியன் குலதெய்வம் கோயில் போய் இருக்கும் தகவலையும் கூறுகிறார். ஆனால் அதில் தனக்கு சந்தேகமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

இருந்தும் பாக்கியா ராமமூர்த்தியிடம் ஆறுதலாகவே பேசி போனை வைக்கிறார். பின்னர் ராஜீ ரூமில் இருக்க அங்கே ராதிகா வருகிறார். நீ இன்னும் தூங்கலையா எனக் கேட்க அந்த நேரத்தில் ராஜீ அம்மா வர அவரும் தூங்கு என்கிறார். பின்னர் ராஜீ தன் அம்மாவை கட்டி பிடித்து கொள்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: எம்மா இப்போ உங்களுக்கு வெட்கமே இல்லையா? ‘லால் சலாம்’ பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்

google news
Continue Reading

More in latest news

To Top