Connect with us

latest news

அழுகாச்சி காவியமான பாக்கியலட்சுமி.. உங்க பாசம் புரியுது.. ஆனா ரொம்ப லெங்தா போகுதுப்பா!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ரூமுக்குள் எழில் வர அமிர்தா மற்றும் நிலா எழுந்து உட்காருகின்றனர். எழில், நிலாவிடம் நீங்க தூங்கலையா எனக் கேட்க தூக்கம் வரலைப்பா என்கிறார். அப்போ என்ன செய்யலாம் எனக் கேட்க விளையாடலாம் என்கிறார் நிலா. இப்போ வேணாம் காலையில் விளையாடலாம்.

கதை சொல்லவா எனக் கேட்க நிலா மறுத்து விடுகிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு தண்ணி கொடுத்து கொண்டு இருக்க அமிர்தா கலங்கி விடுகிறார்.அவருக்கும் அருகில் உட்கார்ந்து அமைதியாக ஆறுதல் சொல்கிறார். கடைசியில் நீயும், நிலாவும் எனக்கு ரொம்ப முக்கியம் என்னைவிட்டு போயிட மாட்ட தானே எனக் கேட்கிறார். அமிர்தாவும் அழுது விடுகிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு ‘புரட்சிக் கலைஞர்’ பட்டம் எப்படி வந்தது தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்…

இதை தொடர்ந்து ரூமில் கோபி தூங்கி கொண்டு இருக்கிறார். ஆனால் ஈஸ்வரி தூங்காமல் இருக்க திடீரென முழிக்கும் கோபி என்ன ஆச்சு எனக் கேட்கிறார். தூக்கம் வரவில்லை என அவர் கூறிக்கொண்டு இருக்கும் போது ராதிகா உள்ளே வருகிறார். நீ தூங்கலையா என்கிறார் கோபி.

மேலே ஒரு ரூம் இருந்துச்சுல அதை சுத்தம் செஞ்சிட்டேன். வாங்க அங்க தூங்கலாம் என்கிறார். ஆனால் ஈஸ்வரி மறுக்கவே அப்பாவும் வெளியில் இருக்காருமா எனக் கூறிவிட்டு மேலே ரூமுக்கு கிளம்புகிறார். வெளியில் வரும் ராதிகா, ராமமூர்த்தியை அழைத்து மாமா நீங்க உள்ளே போய் படுங்க என அனுப்பி விடுகிறார்.

மேலே சென்ற கோபி, எழிலை நினைத்து கலங்குகிறார். அவனுக்கு சின்ன வயசுலேந்து அவங்க அம்மாவை தான் பிடிக்கும். எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும் என்கிறார். உடனே ராதிகா நான் ஒன்னு சொல்லவா இப்போ ராஜேஷ் வந்து என்னையும், மயூவையும் கூப்பிட்டா என்ன செய்வீங்க என்கிறார்.

இதையும் படிங்க: சந்தானம் படத்தில் அட்ஜெஸ்மெண்ட் கேட்ட அப்பா வயது இயக்குனர்!.. பகீர் கிளப்பும் யாஷிகா ஆனந்த்…

அது எப்படி? எல்லாத்தையும் விட்டுட்டு தானே இந்த புது லைப்பில் இருக்கோம். அதுப்போல தான் அமிர்தாவும் பழசை மறந்து எழிலை உயிரா நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கா என்கிறார். அந்த உண்மையை கணேஷுக்கு புரிய வைப்போம். அப்போ எல்லாம் சரியாகும். அதுக்கு வழியை காலையில் எழுந்து யோசிக்கலாம். இதை கேட்ட கோபி நீ பேசுறது எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு ராதிகா என்கிறார். இதையடுத்து காலையில் எல்லாரும் ஹாலில் உட்கார்ந்து இருக்கின்றனர்.

அப்போ இனியா அம்மா இன்னைக்கு நான் லீவ் போட்றவா எனக் கேட்கிறார். நிலா அங்கு வந்து தாத்தா, அத்தை என எல்லாரிடமும் ஒட்டிக்கொள்ள அதை பார்த்து ராமமூர்த்தி கலங்கி விடுகிறார். இப்படி இருக்க பேத்தியை என்னால எப்படி விட்டு இருக்க முடியும்? அவ எங்கையும் போகக்கூடாது எனச் சொல்லி அழுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top