Connect with us

Uncategorized

எழிலுக்கு ப்ரேக்… இன்னைக்கு செழியன் பிரச்னை… மீண்டும் ரிவர்ஸ் கியர் எடுத்த ராதிகா… முழிக்கும் கோபி!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் மற்றும் அமிர்தா தூங்கி எழுகின்றனர். அசந்து தூங்கி கொண்டு இருக்கும் அமிர்தாவை தொல்லை செய்யாமல் எழில் எழுந்து கிளம்பி வருகிறார். அமிர்தா எழுந்து பார்க்க சாரிங்க தெரியாம தூங்கிட்டேன். எப்போ தூங்கேனே தெரியலை என்கிறார். பரவாயில்லை ரெஸ்ட் எடு என்கிறார்.

நிலா எங்க எனக் கேட்க அவ நான் எழுந்திருக்கிறது முன்னாடியே எழுந்து கீழே போயிட்டா எனக் கூறுகிறார். கீழே போகும் எழில் பாக்கியாவிடம் குட் மார்னிங் சொல்ல காபி தரவா எனக் கேட்கிறார். ஹாலுக்கு எடுத்து வாங்க நான் அங்க போறேன் எனப் போய் சகஜமாக பேசிக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: திரிஷா, தனுஷ் பற்றி மேடையில் கூல் சுரேஷ் என்ன சொன்னார் தெரியுமா?.. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்பீச்!..

செழியன், எல்லாம் ஓகேவா டா எனக் கேட்க ஓகேடா என்கிறார் எழில். நீ எங்க ஆபிஸ் கிளம்பிட்டியா எனக் கேட்க இல்லடா இன்னைக்கு கோர்ட்டுக்கு கேஸ் வருது அங்க போறேன் எனச் சொல்கிறார். நானும் வரவா என எழில் கேட்க வேண்டாம். அம்மா வராங்க என்கிறார் செழியன். உடனே ஈஸ்வரி நானும் வரேன். கோபி நீயும் வா என்கிறார். சரி எனக்கும் அப்படி தான் தோணுது.

நான் போய் ராதிகாவிடம் சொல்லிவிட்டு வரேன் எனப் போக ஈஸ்வரி அனுமதி கேட்க போறீயா எனக் காலை வார இல்லமா என சமாளித்து விட்டு போகிறார். ஆனால் ராதிகா கோபி ஏன் ஆபிஸ் கிளம்பலை எனச் சொல்கிறார். இன்னைக்கு கோர்ட் போகும் விஷயத்தை கூற நான் வரவா எனக் கேட்கிறார். இல்ல அம்மா, பாக்கியா உடன் வருவதாக கூற ராதிகா ரொம்ப ஓட்டிக்கிட்டு நிக்காதீங்க.

இதையும் படிங்க: காக்கா கழுகு கதை சொல்லும் நடிகர்கள் மத்தியில் கெத்து காட்டிய தனுஷ்! பேசியதை கேட்டா ஆச்சரியப்படுவீங்க

வீட்டில் நிலா மற்றும் ராமமூர்த்தி விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். நிலா தன்னை பார்க் கூட்டிட்டு போக சொல்ல கணேஷை நினைத்து வேண்டாம் என்கிறார் ராமமூர்த்தி. அப்போ கீழே வரும் அமிர்தா அதை பார்த்து மீண்டும் மாடிக்கு சென்று விடுகிறார். ராதிகா உள்ளே வந்து தன்னுடைய கதையை சொல்லி இது தான் உன் வாழ்க்கை என புரிய வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Uncategorized

To Top