போலீஸுடன் வீட்டுவந்த கணேஷ்!.. அமிர்தா பிரச்னை முடியுமா? முடியாதா? என்னங்கடா!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் ஈஸ்வரியுடம் கோபி ஏன்மா இப்படிலாம் பேசுனீங்க. எனக்கு தெரியாது என்கிறார் ஈஸ்வரி. சினிமாவில் பாத்து இருப்பீங்களா என கோபி சொல்லிக்கொண்டு வர எதிரே ஜோசப் வர ஈஸ்வரிக்கும், அவருக்கும் சண்டை வருகிறது. விவகாரத்து கிடைக்காது. கிடைச்சா குழந்தையை நாங்க வாங்கிப்போம் என்கிறார்.

ஜோசப்பும் பார்த்து விடலாம் எனக் கூறிவிட்டு சென்று விடுகின்றனர். அதனைத் தொடர்ந்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார் கணேஷ். நேராக உள்ளே சென்று நின்ற கணேஷை கான்ஸ்டபிள் என்னவென கேட்க என் பொண்டாட்டியும் பிள்ளையையும் கடத்தி வச்சிருக்காங்க என்று கூறுகிறார். அவர் இன்ஸ்பெக்டரிடம் அழைத்து செல்ல கணேஷ் நடந்த அனைத்தும் கூறுகிறார்.

இதையும் படிங்க: என்ன ஏலியன் இப்படி கோபப்படுது!.. மாஸ் காட்டும் அயலான் டிரெய்லர்.. பொங்கலுக்கு வசூல் வேட்டை தான்!

பின்னர் கணேஷுடன் அந்த கான்ஸ்டபிளையே விசாரிக்க அனுப்பி வைக்கிறார். கணேஷ் சும்மா பேசிக்கொண்டே வருகிறார். அந்த கான்ஸ்டபிள் கடுப்பாகிறார். ஒருவழியாக அவரை அழைத்து கொண்டு பாக்கியா வீட்டுக்கு வந்து விடுகிறார்.

அப்போது ஈஸ்வரி கோர்ட்டில் செய்த விஷயத்தை சொல்லி கொண்டு இருக்க உடன் ராமமூர்த்தி, எழில் அருகில் இருக்கின்றனர். கணேஷை பார்த்த ஈஸ்வரி உன்னை தான் இங்கு வரக்கூடாதுனு சொல்லி இருக்கோம்ல. எழில் போலீஸுக்கு கூப்பிடு எனக் கூற நானே கூட்டிக்கிட்டுவந்து இருக்கேன் என கணேஷ் ஷாக் கொடுக்கிறார்.

இதையும் படிங்க: மீனாவிடம் அலப்பறையை கூட்டிய விஜயா!.. மனோஜின் சேட்டையை கண்டுப்பிடித்த முத்து!

பின்னர் கணேஷ் வந்த விஷயத்தை கேளுங்க சார் என்கிறார். அவரும் அமிர்தாவை கூப்பிட சொல்கிறார். அமிர்தா கீழே இறங்கி வர கணேஷை பார்த்து அதிர்கிறார். பின்னர் அங்கு இருந்த கான்ஸ்டபிள் எனக்கு எல்லா விஷயமும் தெரியும். இப்போ நீ கணேஷுடம் போறியா இல்லையா எனக் கூறு என்கிறார். அமிர்தா சொல்ல வருவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Related Articles
Next Story
Share it