பாரால் முதல் நாளே பெரிய பிரச்னை… பழனிசாமியால் மூச்சுவிட்ட பாக்கியா.. அப்போ அவ்வளவு தானா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராமமூர்த்தி கையில் குழந்தையை வச்சி கொஞ்சிக்கொண்டு இருக்கிறார். அப்போ அமிர்தா வந்து பேப்பரை எடுத்துடவா தாத்தா எனக் கேட்க எடுத்துடுமா இனிமே பேப்பரே படிக்க கூடாதுனு இருக்கேன். கட்டுன பொண்டாட்டியை விட்டுட்டு இன்னொரு பொண்ணோட போயிட்டான். இப்போ அந்த பிள்ளை நடுத்தெருவுல நிக்கிது.

நம்ம வீட்டில் ஒருத்தன் இருந்தானே கோபினு ராமமூர்த்தி திட்டிக்கொண்டு இருக்க ஜெனி செழியனை நினைத்து முகம் வாடி விடுகிறார். குழந்தை அழுதுக்கொண்டு இருப்பதை பார்த்து அமிர்தா வாங்க போக எல்லாத்துக்கும் கருத்து சொல்லாதீங்க என எழுந்து செல்கிறார். பாரில் பங்ஷன் முடிந்ததும் எல்லாரும் சாப்பிட வருகின்றனர். முதலில் அமைதியாக சாப்பிட பின்னர் சண்டை போட தொடங்குகின்றனர்.

இதையும் படிங்க: ஒரு ஹைப்பும் இல்லாத இந்தியன் 2?.. ஆடியோ லாஞ்சுக்கு அப்புறமாவது தேறுமா?.. விழி பிதுங்கிய லைகா!..

பாக்கியா செய்வதறியாமல் திணறி நிற்க பழனிசாமி வருகிறார். எல்லாரும் என்ன தேவை எனக் கேட்க அதை செய்து கொடுத்து சமாளிக்கிறார். அமிர்தா ஹோட்டலுக்கு வர அவரை கவனிக்கும் பாக்கியா உன் முகமே சரியில்லையே எனக் கேட்க அதெல்லாம் இல்லைமா. ஆட்டோல வந்ததா இருக்கும் என சமாளிக்கிறார். பின்னர் பார் ஓனரை அழைக்கும் பாக்கியா சொல்லிய ஆர்டரை விட அதிக ஆட்களுக்கு சமைத்ததாக கூற என்ன அதிகமா பணம் கேக்குறீங்க.

நான் உங்களுக்கு எவ்வளோ பெரிய ஆர்டரை கொடுத்து இருக்கேன். அதெல்லாம் தரமுடியாது எனக் கூறி செல்கிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சியாகி விடுகிறார். ராதிகா வீட்டில் சமையல் செய்து ஈஸ்வரிக்கு கொடுக்க ரெடியாக இருக்க அப்போது கோபி கிச்சனில் இருந்து சாப்பாட்டை அனுப்பிவிடுகிறார். டைனிங் டேபிளில் வந்து அமரும் ஈஸ்வரி ஓவர் பில்டப் செய்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: மாமியாரு முன்னாடியே அந்த மாதிரி சீன்ல நடிச்ச நிழல்கள் ரவி… ‘ஐயையோ… அவங்க என்ன நினைச்சிருப்பாங்க’..?!

 

Related Articles

Next Story