Connect with us

Cinema News

செழியன், ஜெனி பிரச்னைக்கு தீர்வு கண்டு பிடிக்க வந்துட்டாங்கப்பா!…முடிச்சி விடுங்க… முடிச்சி விடுங்க…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா மற்றும் எழில், செழியனை பொய் சொல்லி அழைத்து செல்கின்றனர். ஈஸ்வரி மற்றும் கோபி கேள்வி கேட்டு குடைந்து கொண்டு இருக்கின்றனர். ஈஸ்வரி ஜெனி வீட்டுக்கு பிரச்னையை பேச போகலையே எனக் கேட்டு ஷாக் கொடுக்கிறார்.

இந்த பக்கம் மரியம் சர்ச்சுக்கு போகலாம் எனக் கூறி ஜெனியை அழைத்து செல்கிறார். அப்போ ஜோசப் எங்க போறீங்க? சர்ச்சுக்கு என்கிறார் மரியம். நான் வேணா ட்ராப் செய்யவா எனக் கேட்க வேண்டாம் எனக் கூறி ஜெனியை அழைத்து சென்றுவிடுகிறார்.

இதையும் படிங்க: இவனுங்களை நம்பி ஏமாந்துட்டேன்!.. லோகேஷ் கனகராஜால் கடுப்பானாரா பிரபல இயக்குனர்?!..

மரியம் சொன்ன அட்ரஸுக்கு வர ஜெனி இங்கு ஏன் எனக் கேட்கிறார். என் பிரண்டு வீட்டுல ஒரு பிரச்னை அதை முடிச்சிட்டு போயிடலாம் என்கிறார். உள்ளே ஜெனி குழந்தைக்கு பால் கொடுக்க செல்கிறார். அப்போ அங்கு பாக்கியாவுடன் எழில் மற்றும் செழியன் வருகின்றனர்.

எழிலுடன் செழியனை வெளியில் விட்டுவிட்டு வந்து மரியமை பார்க்கிறார். செழியன் இங்கு ஏன் வந்தோம்? நாம விளம்பர கம்பெனிக்கு போவதாக தானே ப்ளான் எனக் கேட்டுக்கொண்டு இருக்கிறார். இதான் அது. அம்மா அவங்களாம் இருக்காங்களா என பார்க்க தான் போயிருக்காங்க என எழில் சமாளிக்கிறார்.

உள்ளே வரும் பாக்கியா, மரியத்திடம் ரொம்ப நன்றி என்கிறார். எல்லாம் நல்லதா நடக்கும் எனக் கூறி ஜெனி ரூமுக்குள் இருப்பதாக சொல்கிறார். எழிலிடம் சொல்லி செழியனை அழைத்து வந்து அந்த ரூமுக்குள் அனுப்பி கதவை சாத்திவிடுகின்றனர். திடீரென அங்கு ஜெனியை பார்த்த செழியன் அதிர்ச்சியில் நிற்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: உங்க அப்பா எங்க? ரோகினியை படுத்தும் விஜயா… முத்துவை நெருங்கும் பிரச்னைகள்!…

google news
Continue Reading

More in Cinema News

To Top