Connect with us

Cinema News

பாக்கியாவை காலி செஞ்சிட்டாரே கோபி… முத டைமா ஜெயிச்சுடுவாரு போலையே…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனி குழந்தையை வாங்கி எல்லோரும் கொஞ்சு கொண்டிருக்கின்றனர். அப்போது  ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி ஆட்டோவில் இருந்து இறங்கி ரெஸ்டாரண்டிற்குள் வருகின்றனர். அந்த நேரத்தில் இனியா ஒரு குழந்தை வைத்து கொஞ்சி கொண்டிருக்க இது யார் பிள்ளை என கேட்கிறார் ஈஸ்வரி.

 உங்களைப் பார்க்க புதுசா வந்திருக்காங்க என இனியா குழப்ப  அந்த நேரத்தில் ஜெனி முன்னாடி வந்து நிற்கிறார். ராமமூர்த்திய அவரை நலம் விசாரிக்க ஈஸ்வரி முகத்தை திருப்பிக் கொள்கிறார். ஜெனி என்கிட்ட பேசுங்க பாட்டி என கேட்க நீதான் விட்டுட்டு போயிட்டல.

இதையும் படிங்க: எங்களுக்கு டைவர்ஸா?.. சிம்பிளா போட்டோ போட்டு முடிச்சி விட்ட நயன்தாரா.. குடும்பத்துடன் ஜாலி டூர்!..

எங்க பேர பிள்ளையை கூட கொஞ்சம் முடியாத படி பண்ணிட்ட என சிணுங்கி கொள்கிறார். பின்னர் இனியா கையில் இருந்த குழந்தையை வாங்கி ஈஸ்வரி கொஞ்சிக் கொள்கிறார். ராமமூர்த்தி குழந்தையை கேட்க முடியாது என்கிறார். பின்னர் இனியா எல்லாரையும் வைத்து குடும்பமாக படம் எடுக்கிறார். இதை தொடர்ந்து மினிஸ்டர் வர டைம் ஆனதால் எல்லாரும் வாசலில் எல்லா ஏற்பாட்டை செய்து காத்திருக்கின்றனர்.

கோபி காரை எடுத்துக்கொண்டு வந்து தள்ளி நின்று நடப்பதை வேடிக்கை பார்க்கிறார். மினிஸ்டர் வராமல் நேரம் செல்ல அவரின் பிஏவும் காலை எடுக்காமல் இருக்கிறார். இதனால் பாக்கியா உள்ளிட்டோர் பதறி நிற்கின்றனர். ஜெனி நேராக சென்று பார்த்து விட்டு வரச்சொல்கின்றனர். பாக்கியாவை இன்னும் ஒருமுறை கால் செய்து பாருங்க என்கிறார் எழில்.

இதையும் படிங்க: ஏய் சூரி சூப்பரப்பு!.. ஸ்கூல் பசங்கள பார்த்து அப்படியொரு வார்த்தை.. மாணவர்கள் முகமெல்லாம் சந்தோஷம்!

அங்கிருப்பவர்களும் மினிஸ்டர் வருவதாக சொல்லி பொய் விளம்பரம் தேடுகிறீர்களா எனச் சத்தம் போட தொடங்குகின்றனர். இதனால் பாக்கியா மீண்டும் பிஏவுக்கு கால் செய்கிறார். போனை எடுத்தவர் உங்க ரெஸ்டாரெண்ட்டுக்கு வருவதாக இருந்தது. ஆனால் திடீரென பள்ளி ஆண்டுவிழாவுக்கு சென்றுவிட்டதாக கூற பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இதை பார்க்கும் கோபி ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top