கோபியை நம்பி வந்தது தப்பா போச்சே… புலம்பி தள்ளும் ஈஸ்வரி… பாக்கியா பிசினஸுக்கு வந்த சோதனை…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா அமிர்தாவிடம் ஜெனியை அட்ஜஸ்ட் செஞ்சிக்கோ என்கிறார். நான் என்னைக்குமே அவங்களை கஷ்டப்படுத்த மாட்டேன். வருத்தப்படாதீங்க என சமாதானம் செய்கிறார். இதையடுத்து எழில் கிச்சனுக்கு வந்து பாக்கியாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

ரொம்ப நேரம் முழிக்காம ரெஸ்ட் எடுங்க எனச் சொல்லி அனுப்புகிறார். இதையடுத்து ரூமில் அமிர்தா மற்றும் எழில் இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். எழில் இந்த படத்தினை வெற்றிகரமா முடிக்கணும். அது எங்க அம்மாக்கு தான் சந்தோஷமா இருக்கும். அவங்க எனக்காக சப்போர்ட்டா இருந்தாங்க எனவும் பெருமையாக பேசுகிறார்.

இதையும் படிங்க: கோட் படத்தை ஓட்ட விஜய் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க!.. யுவன் சங்கர் ராஜா கொடுத்த அப்டேட்!..

அடுத்ததாக, கோபி ஹாலில் படுத்து இருப்பதை பார்த்து என்னாச்சு எனக் கேட்கிறார் ஈஸ்வரி. பரவாயில்லமா விடுங்க என சமாதானம் செய்கிறார். காபி குடிச்சியா எனக் கேட்க இல்லப்பா என்கிறார் ஈஸ்வரி. இருங்க நான் போட்டு தரேன் என கோபி கிச்சனுக்குள் செல்கிறார். காபி போட தெரியாது என ராதிகா தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு அவர் கிளம்பி செல்ல பார்க்கிறார். ஆனால் கமலா தடுத்துவிடுகிறார்.

கோபி கசப்பாக காபியை போட்டு கொண்டு வந்து ஈஸ்வரியிடம் நீட்டுகிறார். பையனுக்காக அதை பொறுத்து குடிக்க அவர் வாக்கிங் சென்றதும் சிங்கில் கொட்டிவிட்டு செல்கிறார். பின்னர் பார்க்கில் பாக்கியாவுடன் ராமமூர்த்தி வருகிறார். அப்போ அங்கு ஈஸ்வரி வர இருவரும் பேசட்டும் என பாக்கியா கழன்று கொண்டு செல்கிறார்.

இதையும் படிங்க: மணிரத்னத்தை தூக்கி சாப்பிட்ட உலக நாயகன்!.. கமலோட வில்லன் கேரக்டருக்கும் ரஜினிக்கும் தொடர்பு?..

கோபி வீட்டில் நடப்பதை சொல்லி கடுப்படித்து கொண்டு இருக்கிறார். வீட்டுக்கு வந்துட வேண்டியது தானே எனக் கேட்க இல்லை ராதிகா அம்மாவை வெளியில் துரத்திவிட்டு தான் வருவேன் எனக் கூறிவிடுகிறார். பாக்கியா வர ஈஸ்வரி கிளம்பி விடுகிறார். ஈஸ்வரி நிலைமையை கூற நான் வேண்டும் என்றால் சாப்பாடு கொடுக்கவா என கேட்டு வருவதாக செல்கிறார்.

அதை ஈஸ்வரியிடம் கேட்க அவர் நான் என் பையன் வீட்டில் தான் இருக்கேன். ரோட்டில் இல்லை எனத் திட்டிவிட்டு செல்கிறார். பாக்கியா ரெஸ்டாரெண்ட்டில் இருக்க பார் ஓனர் பத்திரிக்கையை வந்து வைக்கிறார். அங்கிருக்கும் பெண்கள் பார் வந்தா வேலைக்கே வர முடியாது என வருத்தப்பட அதெல்லாம் நடக்காது எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Related Articles
Next Story
Share it