Connect with us

Cinema News

ஈஸ்வரிக்கிட்ட ஒருவழியா விஷயத்தினை உடைச்சிட்டாரே கோபி… இனியாவது கதைய மாத்துங்கப்பா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி ஈஸ்வரியை காரில் அழைத்து செல்கிறார். அப்போ ஈஸ்வரி உனக்கு என்னடா பிரச்னை என்கிறார். ஏன் அப்படி கேட்கிறீங்க எனக் கேட்க நீயும், ராதிகாவும் ஒரு வாரமா சரியில்லை என்கிறார். ஆமா அம்மா உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும் என்கிறார்.

நீங்க பாட்டியாக போறது தெரிஞ்சா என்ன பீல் பண்ணுவீங்க எனக் கேட்க அதான் ஏற்கனவே ஆகிட்டேனே எனக் கூறுகிறார். கோபி காரை நிறுத்திவிட்டு இல்ல நம்ம வீட்டுக்கு ஒரு குழந்தை வரப் போறது தெரிஞ்சா என்ன ஃபீல் பண்ணுவீங்க என்கிறார். நான் உங்களுக்காக ஒரு குழந்தை பெத்துக்கோங்கணு சொன்னேன். என்னமோ என்கிட்ட கத்துனான். இப்போ சந்தோஷமா இருக்கு என்கிறார்.

இதையும் படிங்க: பாத்ததும் ஷாக் ஆயிட்டோம்!.. டிரெஸ்ஸே அப்படித்தானாம்!.. கிளுகிளுப்பு காட்டும் ஜான்வி கபூர்!..

குழம்பும் கோபி நீங்க யாரை பத்தி பேசுறீங்க எனக் கேட்க எழில் தானே என்கிறார் ஈஸ்வரி. அவனைப் பத்தி இல்லமா என்க அப்போ செழியனுக்கு குழந்தை பிறக்க போகுதா? ஆனா இப்போ தானே சேர்ந்து இருக்காங்க. குழந்தை எப்படி என்கிறார். இதில் கடுப்பாகும் கோபி எனக்கு தான் குழந்தை பிறக்க போகுது எனப் போட்டு உடைக்கிறார். இதில் ஷாக்காகும் ஈஸ்வரி கோபி நீ என்ன சொன்ன எனக் கேட்க ஆமாம்.

எனக்கு தான் குழந்தை பிறக்க போகுது. ராதிகா கர்ப்பமா இருக்கா என்கிறார். எத்தனை மாதம் என ஈஸ்வரி கேட்க அதெல்லாம் தெரியாது. அடுத்த வாரம் ஸ்கேனுக்கு வரச் சொல்லி இருக்காங்க என்கிறார். பையன் குழந்தை பெத்துக்க போறேனு சொன்னா சந்தோஷப்படுவாங்க. ஆனா என்னால சந்தோஷப்பட முடியலை என்கிறார். உன் பசங்க உன்னை மதிக்க மாட்டாங்க.

இதையும் படிங்க: அஜித் கேட்ட முதல் சம்பளம்!.. அதுவும் எதற்காக தெரியுமா?!.. அப்பவே அவர் அப்படித்தான்!…

உனக்கு கல்யாணம் ஆனாலும் பாக்கியா எங்க கூடவே இருக்கா. அவ தான் எங்களுக்கு முதல். அப்புறம் தான் நீ என்கிறார். பதட்டத்துடன் வீட்டுக்கு வருகிறார் ஈஸ்வரி. அவரை பார்த்த பாக்கியா என்ன ஆச்சு அத்தை எனக் கேட்க வெயிலில் போனதால் வேர்த்து இருக்கு எனச் சமாளிக்கிறார். எங்க போனீங்க அத்தை எனக் கேட்க எங்க அம்மாவை வெளியில் கூட்டிக்கிட்டு போக உன்கிட்ட பெர்மிஷன் வாங்கணுமா என்கிறார். 

இதையடுத்து ராதிகா எங்கே எனக் கேட்க ரூமில் இருப்பதாக சொல்கிறார். ஈஸ்வரி ஏறப்போக நீங்க ஏன்மா கால் வலியோட ஏறிட்டு இருக்கீங்க என்கிறார். அதான் என்னை ஏற வச்சிட்டியே. மாடிக்கு வரும் கோபி மற்றும் ஈஸ்வரியை பார்த்து ராதிகா அதிர்ந்து நிற்கிறார். கோபி விஷயத்தினை சொல்லிட்டேன் என வாயசைக்கிறார். ஈஸ்வரி இந்த குழந்தை வேண்டாம் எனக் கூறுகிறார். இது வேண்டுமா இல்லையானு நாங்க தான் முடிவெடுக்கணும் என ராதிகா சொல்வதுடன் இன்றைய எபிசோட்  முடிந்தது.

இதையும் படிங்க: காசுக்கு ஆசைப்பட்டு கோட்டை விட்ட கரண்!.. கடைசியா விக்ரம் நடிச்சு சூப்பர் ஹிட்டான படம் எது தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema News

To Top