Connect with us

latest news

வளர்ந்த பிள்ளைகள வச்சிக்கிட்டு லூட்டியா அடிக்கிற நீ… யாரு கேட்குறதுனே இல்லாம போச்சு..கோபி சார் நீங்க அடிச்சது விட கம்மி தான்..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பொருட்காட்சிக்கு பொருட்களை அனுப்ப சரியாக மழை பிடித்து கொள்கிறது. விடாமல் மழை நீடிக்க டிவியில் நியூஸ் சேனலில் பொருட்காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகிறது. இதை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். பாக்கியா மனம் உடைந்து நிற்கிறார்.

இதில் ஈஸ்வரி தேவையா இதெல்லாம்? அப்போவே சொன்னேன். கேட்டியா? இப்போ பாரு ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் போச்சு. இதுவரை உன் பணத்தை மட்டும் தான் விட்டுட்டு இருந்த, இப்ப எழில் பணத்தையும் சேர்த்து நஷ்டம் ஆகிட்டியே என திட்டுகிறார். இதில் கோபியும் என்கிட்ட இந்த பொருட்காட்சி காண்ட்ராக்ட் நடத்தி காட்றேனு சவால் விட்டியே, இப்ப என்ன பண்ண போற என்கிறார்.

இதையும் படிங்க: விஜய் செஞ்ச வேலையில் அஜர்பைசானில் இருந்து கிளம்பிய அஜித்?!.. இது என்னடா அக்கப்போரு!.

ராதிகா உங்களுக்கு இது தேவையில்லாதது. பேசாம வாங்க என்று அழைத்துக் கொண்டு ரூமுக்குள் சென்று விடுகிறார். இதையடுத்து எழில் பாக்கியாவை சமாதானம் செய்து விட்டு பொருட்காட்சியில் நம்ம பொருள் சரியா இருக்கா என்பதை பார்க்க போகிறார். அமிர்தாவும் எழிலுடன் கிளம்பி விடுகிறார்.

இதையடுத்து செல்வி கடை அண்ணாச்சியிடம் இன்னைக்கு பொருள் அனுப்ப வேண்டாம் எனக் கூற சென்று விடுகிறார். ராமமூர்த்தியும், ஈஸ்வரியும் வெளியில் கிளம்பி சென்று விடுகின்றனர். இதை தொடர்ந்து வீட்டில் செழியன் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு இருக்க அந்த நேரத்தில் பழனிசாமி வருகிறார். செழியனிடம் நலம் விசாரிக்க அங்கு வரும் பாக்கியா என்ன சார் சொல்லாமல் வந்து இருக்கீங்க என்கிறார்.

இதையும் படிங்க: அண்ணாமலை போட்ட கண்டிஷனால் ஆடிப்போன விஜயா… நடக்காத விஷயத்துக்கு இத்தனை கூத்தா?

உடனே கோபி வீட்டுல யாரும் இல்லாத நேரத்தில் ரெண்டு பேரும் தனியா லூட்டி அடிக்கிறீங்களா. ப்ரண்டுனு சொல்ல வேண்டியது பார்க், ரோடுனு நின்னு பேச வேண்டியது எனப் பேசிக்கொண்டே போகிறார். யாரும் இல்லாத வீட்டில இப்படி உட்கார்ந்து பேச வெட்கமா இல்ல. வார்த்தையை அடக்காமல் கோபி எக்கசக்கமாக பேசிக்கொண்டே போகிறார். இதனால் பாக்கியா கொதித்து போய் நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top