Connect with us

latest news

வீதிக்கு வந்த செழியன் பஞ்சாயத்து..! வீட்டில் எண்ட்ரியான மாலினி..! ஒத்த ரோசா வீடு தாங்காதும்மா..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் காய்ச்சலில் வீட்டு ஹாலில் உட்கார்ந்து இருக்கிறார். உடம்பு சரியில்லாத பிள்ளையை பார்க்காம இந்த பாக்கியா எங்க போனா என ஈஸ்வரி திட்டிக்கொண்டு இருக்கிறார். அங்கு வரும் அமிர்தா காய்ச்சலுக்கு முத மாத்திரை போடு எனக் கொடுக்கிறார்.

இதையடுத்து கோயிலில் இருந்து வரும் பாக்கியாவை இனியா திட்டிக்கொண்டு இருக்கிறார். அவரை சமாதானம் செய்து விட்டு செழியனை தனியாக அழைக்கிறார். ஈஸ்வரி எதுவும் பிரச்னையா எனக் கேட்க இல்லை பேங்க் விஷயமா கேட்கணும் எனச் சொல்லி சமாளிக்கிறார். 

இதையும் வாசிங்க:மேஜர் சுந்தர்ராஜன் கேட்ட உதவி!.. ஸ்டிரிக்ட் கண்டிஷன் போட்ட எம்ஜிஆர்.. பழச மறக்காத மக்கள் திலகம்

இதையடுத்து ஜெனியை போய் பார்த்து விட்டு எழில் ரூமுக்கு வா எனக் கூறிவிட்டு செல்கிறார். ரூமுக்கு வரும் செழியனிடம் மாலினியை பார்த்துவிட்டு வருவதாக கூறுகிறார். இதனால் செழியன் அதிர்ச்சியாகி விடுகிறார். நான் எதுவும் செய்யலைனு தானே சொன்ன எனக் கேட்க ஆமாம்மா நான் பண்ணலை என்கிறார்.

இதனால் செழியனை அடிக்கும் பாக்கியா அப்போ இது என்ன என்று போட்டோவை எடுத்து காட்டுகிறார். நான், தாத்தாலாம் எவ்வளவோ நல்லது சொன்னோம் அது எதுவுமே உன் மண்டையில் ஏறல. உங்க அம்மா செஞ்ச கெட்டது நல்லா பதிஞ்சிட்டா எனக் கடுமையாக திட்டுகிறார்.

இதையடுத்து நடந்த விஷயத்தினை ஜெனியிடம் கூற சொல்ல செழியன் அதிர்ச்சியாகி விடுகிறார். இதையடுத்து கிச்சனுக்கு வரும் ராதிகா மளிகை பொருட்களை வாங்கி வந்து நிரப்பி வைக்கிறார். எனக்கும் சமைக்க கொஞ்ச நேரம் கொடுத்தால் செஞ்சிக்குவேன் என்கிறார்.

இதையும் வாசிங்க:வீட்டுக்கு வந்த மீனா… தன் வேலையை தொடங்கிய விஜயா… பழைய ஃபார்முக்கு வந்துட்டீங்க போல..!

அமைதியாகவே பாக்கியா இருக்க செல்வியிடம் செலவுக்கே காசு இல்லை என்ன பண்ணப்போறேனே தெரியலை எனக் கவலையாக பேசிக்கொண்டு இருக்கிறார். அங்கு வரும் எழில் அம்மாவிடம் சம்பளப் பணத்தினை நீட்டுகிறார். வேணாம் நீ போய் நிலாவை பாரு எனக் கூறி அனுப்புகிறார்.

இதையடுத்து ஹாலில் ராமமூர்த்தி, ஈஸ்வரி மற்றும் கோபி அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போ காபி எடுத்து வருகிறார் பாக்கியா. கோபிக்கு ஆசை வர ஆனால் கொடுக்கவில்லை. இதனால் ஈஸ்வரி தனக்கும் காபி வேண்டாம் எனக் கூறிவிடுகிறார். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் மாலினி கோபமாக வீட்டுக்குள் நுழைகிறார். பாக்கியாவை கோபத்துடன் பார்த்து கொண்டு நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top