Connect with us

latest news

ராதிகாவை தொடர்ந்து பாக்கியா வீட்டில் மாலினி..! அப்பாவுக்கு பையன் தப்பாம இருக்கீங்க செழியன்..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டுக்குள் வரும் மாலினி செழியன், செழியன் எனக் கத்திக்கொண்டு இருக்கிறார். இதற்கு பாக்கியா தேவையில்லாமல் எதுக்கு இங்க வந்திருக்க எனக் கேட்கிறார். ஈஸ்வரியும் வம்பு செய்யவே வந்து இருக்கியா? வெளியே போ எனத் திட்டுகிறார்.

அந்த நேரத்தில் மாடியில் இருந்து செழியன் கீழே இறங்கி வர ஜெனியும் உடன் வருகிறார். இதையடுத்து மாலினி ஜெனியை எனக்கு பிடிக்கலை. என்னை தான் பிடித்து இருக்கு. கல்யாணம் செஞ்சிக்கிறேனு சொன்னியே செழியா என்கிறார் மாலினி.

இதையும் படிங்க: சிவாஜி நடித்த பாடலுக்கு குரல் கொடுத்த டி.எம்.எஸ்!.. ஆனாலும் அப்செட் ஆன எம்.எஸ்.வி..

இதைக்கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியாகி விடுகின்றனர். செழியனும் இதெல்லாம் பொய் என்பது போல அழும் நிலையில் இருக்கிறார். செழியன் அப்படியெல்லாம் பண்ணாது என செல்வி கூறுகிறார். இப்படி சொன்னா லைஃப் எப்படி ஆகும்னு தெரியுமா என்கிறார் அமிர்தா. இருந்தும் மாலினி தொடர்ச்சியாக பொய்களை இறக்குகிறார்.

மாலினி உனக்கு எனக்கும் எதுவும் இல்லை. வெளியில் போ எனக் கூறுகிறார். நமக்குள் ஆபிஸை தாண்டி ஒரு உறவு இருந்துச்சு. அதை நிரூபிக்க முடியும் என்கிறார். அப்புறம் நான் வீட்டை விட்டு போறதா என்பதை பற்றி யோசிக்கலாம் என்கிறார்.

இதைத் தொடர்ந்து தானும் செழியனும் இருக்கும் புகைப்படத்தினை காட்டுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியாகி விடுகின்றனர். ஈஸ்வரி அசராமல் என்ன போட்டோஷாப் செஞ்சிட்டு வந்து காட்டுறீயா எனத் திட்டுகிறார். இதையடுத்து தான் செழியனுடன் இருக்கும் வீடியோவை காட்டுகிறார் மாலினி.

இதையும் படிங்க: சிவாஜியை வைத்து இயக்கிய பிரபல இயக்குனர்… எம்.ஜி.ஆரை மட்டும் இயக்கலையாம்.. ஏன் தெரியுமா..?

அதை பார்த்த பாக்கியா இனியாவை ரூமுக்கு போ என்கிறார். இதையடுத்து ஜெனி அதிர்ச்சியில் கண்ணீர் விடுகிறார். குடும்பமே அதிர்ச்சியில் நிற்க செழியனின் நிலை பரிதாபமாகி விடுகிறது. இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top