Connect with us

latest news

சைக்கோவா நீ…! மாலினி செய்த வேலையை பார்த்து கடுப்பான ரசிகர்கள்..! அதுக்கு தான் வெறும் பெட்டு போல..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மாலினி செழியனுக்கு கால் செய்கிறார். போனை பதறி கொண்டே எடுக்கிறார் செழியன். மாலினி அவரை மிரட்டி கொண்டு இருக்க சரியாக அங்கு வருகிறார் பாக்கியா. உடனே போனை கட் செய்துவிடுகிறார்.

செழியன் பாக்கியாவை காண திருதிருவென முழிக்கிறார். யாருகிட்ட பேசிக்கிட்டு இருக்க எனக் கேட்கிறார்.  ஆஃபீஸ் கால் என்று சொல்லி சமாளிக்கிறார். ஆனால் பாக்கியா அந்த மாலினி தானே. ஒழுங்கா சொல்லிடா ஏதாச்சும் சொல்லி மிரட்டுறாளா? என்று கேட்கிறார். ஆனால் செழியனோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என கூறி உள்ளே சென்று விடுகிறார்.

இதையும் படிங்க: நான் ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன்.. அட நம்ம லெஜண்ட் அண்ணாச்சியை பார்த்தீங்களா.. விஜயதசமிக்கு கலக்குறாரே!..

இதையடுத்து, கோபி வாக்கிங் சென்று கொண்டு இருக்கிறார். அங்கு பார்ப்பவர் என்ன ஹார்ட் அட்டாக்கா என்று நலம் விசாரிக்கிறார். அவரால் கடுப்பாகும் கோபி அதெல்லாம் எதுவும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த வழியாக வரும் பாக்கியாவிடமும் சாருக்கு ஹார்ட் அட்டாக் கேட்க மாட்டீங்களா என்கிறார்.

இதனால் கடுப்பாகும் பாக்கியா அதுக்கு நான் என்ன பண்ணறது. நான் கார்டியாலிஸ்ட்டா என்று பதிலடி கொடுத்து நகர்ந்து விடுகிறார். வாக்கிங் முடித்து விட்டு வீட்டுக்கு வரும் கோபியை காண கிரெடிட் கார்ட் அதிகாரிகள் நிற்கிறார்கள். இதை பார்த்து கோபிக்கு அதிர்ச்சி ஆகிறார். கோபி ஒரு மாசம் டைம் கொடுங்க எனக் கேட்டு கொண்டு இருக்கிறார்.

அந்த நேரத்தில் பாக்கியா அங்கு வந்துவிட கோபியை சந்தேகமாக பார்த்து விட்டு உள்ளே செல்கிறார். இதையடுத்து கோபி வங்கி அதிகாரிகளை சமாளித்து அனுப்புகிறார். பிறகு ராதிகா வெளியில் வர கோபி போய் அவரை கொஞ்சிக்கொண்டு இருக்கிறார். ராதிகா என அழைக்க என் பேரு நியாபகம் இருக்கா எனக் கோபப்படுகிறார்.

இதையடுத்து அங்கு வரும் ஈஸ்வரி கோபியை உள்ளே அழைத்து சென்று விடுகிறார். ராதிகா முறைத்து கொண்டு நிற்கிறார். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் மாலினி, ஜெனியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். செழியனைக் கேட்க வெளியே போய் இருப்பதாக கூறுகிறார். அப்படியா இருங்க நான் போன் பண்ணா பத்து நிமிஷத்துல வந்துருவான் என்கிறார்.

அதுப்போல, செழியன் பதறி அடித்து ஓடி வர எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. மாலினி ஜெனி குழந்தையை வாங்கி கொஞ்சி கொண்டு இருக்கிறார். எல்லாரும் உள்ளே சென்று விடுகின்றனர். செழியனுக்கும் கால் வந்துவிட அவர் தள்ளிப்போய் பேசுகிறார். பிறகு ஜெனி வந்து குழந்தையைக் கேட்கிறார்.

இதையும் படிங்க: நல்லா தளதளன்னு இருக்கியே!.. வளஞ்சி நெளிஞ்சி போகும் அழகை காட்டும் யாஷிகா ஆனந்த்…

செல்வி அக்கா வாங்கி கொண்டதாக கூற, செல்வி நான் வாங்கவே இல்லை என்கிறார். இதனால் குடும்பமே அதிர்ச்சி ஆகிவிடுகின்றனர். பதற்றத்துடன் அனைவரும் வீட்டை சுற்றி தேட தொடங்குவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top