Cinema News
லேட்டா வந்த ரஜினிகாந்த்!.. பளார் விட்ட பாரதிராஜா!.. இளையராஜா அதுக்கு மேல அந்த மேட்டரை தொடலையாம்!..
Published on
இளையராஜாவின் பிறந்தநாள் பார்ட்டியில் பாரதிராஜா ரஜினிகாந்தை பளாரென அறைந்தது பெரிய பஞ்சாயத்தை அப்போது ஏற்படுத்தி விட்டதாக பிரபலம் ஒருவர் பழைய குப்பையை கிளப்பி அதனால் தான் ரஜினிகாந்த் இளையராஜா பயோபிக் நிகழ்ச்சிக்கே வரவில்லை எனக் கூறியிருக்கிறார்.
இளையராஜாவின் பயோபிக் படம் காலத்தில் அழியாத படமாக இருக்கும் என்றும் அதில் தனுஷ் நடிக்கும் நிலையில், நிச்சயம் இளையராஜாவை கண் முன்னே கொண்டு வந்து விடுவார். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் இளையராஜாவை வைத்து நல்லாவும் படம் எடுக்கலாம். அவரை பிடிக்காதவர்கள் எடுத்தால் அது ஒரு விதமான படமாக வந்தாலும் அதிலும் இளையராஜாவின் சிறப்புகளை தான் அவர்கள் பாடிக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: என்னால பாட முடியாது!. கமலால் மட்டும்தான் முடியும்!.. எஸ்.பி.பி.யையே மிரள வைத்த பாடல் எது தெரியுமா?..
தனுஷ் நடிப்பதால் மட்டுமே ரஜினிகாந்த் அந்த விழாவுக்கு வரவில்லை என்றும் ரஜினிகாந்துக்கும் பாரதிராஜாவுக்கும் இடையே நடைபெற்ற சண்டைக்கு காரணமாகவும் இளையராஜா மாறியது தான் அதற்கு காரணம் என அந்தணன் சமீபத்திய வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.
தியாகராஜன் வீட்டில் நடைபெற்ற இளையராஜாவின் பார்ட்டிக்கு ரஜினிகாந்த் தாமதமாக வந்திருக்கிறார். ஏன் டா லேட்டு என பாரதிராஜா கேட்க, ரஜினிகாந்த் வழக்கம் போல நக்கலாக ஒரு பதில் சொல்ல, பாரதிராஜாவுக்கு கோபம் வந்து ரஜினிகாந்தை கன்னத்திலேயே பளார் என அறைந்து விட்டாராம். அந்த நிகழ்ச்சி பெரிய சர்ச்சையை கிளப்ப அன்று முதல் குடிக்கவே மாட்டேன் என்றும் பார்ட்டியே தேவையில்லை என இளையராஜா அதன் பின்னர் தான் தண்ணி போடுவதையே நிறுத்தி விட்டதாக அந்தணன் அதிர்ச்சி கிளப்பி உள்ளார்.
இதையும் படிங்க: முதுகை காட்டியே மூடேத்தும் கோட் ஹீரோயின்!.. ஷைன் ஆகிட்டே போகும் மீனாட்சி செளத்ரி!..
இந்த மாதிரி ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயங்கள் இளையராஜா வாழ்க்கையில் இருக்கிறது. அதையெல்லாம் படமாக சரியாக எடுத்தால் ஏகப்பட்ட விருதுகளை வாங்கும். ஆனால், சர்ச்சையை தொடாமல் இளையராஜா போற்றியாக தனுஷ் படம் வந்தால் பெரிதாக கண்டுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
Tamil Movies: சமீப காலமாக கோலிவுட்டில் எந்த ஒரு பெரிய நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு மாறாக மலையாள சினிமாவில்...
இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து கூட்டுத்தயாரிப்பில் ஒரு படம் சிவாஜியை வைத்து எடுத்தது அது தான் பைலட் பிரேம்நாத். இதுகுறித்து அந்தப் படத்தின்...
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருது வாங்கிக் கொடுத்த பாடல் ஜெய்ஹோ. சமீபத்தில் அவர் மேல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. ராம்கோபால் வர்மா ஒரு...
திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில இயக்குனர்கள் புதிய முயற்சிகளை செய்து சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்கள். பரிசோதனை முயற்சியாக இருந்தாலும்...
நடிகர் சிவாஜி எப்படிப்பட்ட நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். 20 வருடங்களுக்கும் மேல் நாடகங்களில் பல வேஷங்களில் நடித்து அனுபவம் பெற்றவர்....